Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
    மாநிலம்

    சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காஞ்சிபுரம்: ‘சமூக நீதிக்கு அடையாளமாக திமுக உள்ளது’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் வந்தார். முதலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், வாக்குச் சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறியதுடன், கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    மகளிர் முகத்தில் மகிழ்ச்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவுக்கு 90 சதவீதம் மகளிர் வந்துள்ளனர். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சி தெரிகிறது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.

    பாஜகவுக்கு அடக்கு முறை அடையாளம். அதிமுகவுக்கு அடிமைத்தனம் அடையாளம். ஆனால், நமது திமுகவுக்கு சமூகநீதிதான் அடையாளம். முதலமைச்சர் பொறுப்பேற்றதும் அவர் முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத்துக்கு கையெழுத்திட்டார். அதன் பின்னர், மகளிர் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார். விடுபட்ட மகளிர் தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனுஅளித்து வருகின்றனர். அவர்களுக்கும் அந்த உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் பாராட்டியதுடன் இதனை பஞ்சாபில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். வீட்டுமனைப் பட்டா என்பது பலருடைய கனவு. மக்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலை மாறி, அரசே உங்களைத் தேடி வந்து பட்டா கொடுக்கிறது. இன்று முதல் நீங்கள் குடியிருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானது. அந்த நிம்மதியுடன் இருக்கலாம்.

    வெளிநாட்டு முதலீடு: முதல்வர் வெளிநாடு சென்று ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார். முதல்வரின் பல்வேறு முயற்சிகளால் தமிழ்நாடு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அரசு உங்களுக்கு துணையாக இருப்பதுபோல் நீங்கள் அரசுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், 4,997 பேருக்கு ரூ.215 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பணி முடிந்த கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்டச் செயலர்க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ், காஞ்சிபுரம் மாநகரச் செயலர் சி.கே.வி.தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

    September 10, 2025
    மாநிலம்

    தேர்தல்வரை பசி, தூக்கம், ஓய்வின்றி உழைப்போம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தல்

    September 10, 2025
    மாநிலம்

    கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகரின் பேரனுக்கு ஐகோர்ட் ஜாமீன்

    September 10, 2025
    மாநிலம்

    சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    September 10, 2025
    மாநிலம்

    கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

    September 10, 2025
    மாநிலம்

    விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகர் சங்க தேர்தலை நடத்த என்ன சிக்கல்? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
    • ரேபரேலியில் பாஜகவினரால் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்: செல்வப்பெருந்தகை கண்டனம்
    • எந்த வயதில் நீங்கள் பால் குடிப்பதை நிறுத்த வேண்டும்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த மாற்று வழிகள் இங்கே | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபஞ்சம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பிற விண்மீன் திரள்களின் எழுச்சி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரவில் பசியுடன் இருப்பது முதல் சர்க்கரை பசி வரை: குறைந்த இரத்த சர்க்கரையின் 4 நுட்பமான அறிகுறிகள் புறக்கணிக்கப்படக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.