சென்னை: பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயார் பி.மீனாள் அம்மாள் (74) மதுரையில் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக டி.குன்னத்தூர் அம்மா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மீனாள் அம்மாள் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் தொலைபேசியில் உதய குமாருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர், வைகைச் செல்வன், மாவட்டச் செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, முருகோடைராமர், எஸ்.டி.கே.ஜக்கையன், செந்தில்நாதன், முனியசாமி, தச்சை கணேசராஜா. எம்எல்ஏக்கள் பெரிய புள்ளான், பூமிநாதன், திரைப்பட தயாரிப்பாளர் அன்புச் செழியன்.
பாஜக இராம.சீனிவாசன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வேலம்மாள் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜெகதீசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அம்மா நினைவு மண்டப வளாகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டது.