Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
    மாநிலம்

    இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

    adminBy adminSeptember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார்.

    தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. வனத்​துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தலைமை தாங்​கி, 333 வனப் பணி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். அதைத் தொடர்ந்து இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடலோர சூழல் அமைப்​பு​களைப் பாது​காக்​க​வும், நிலை​யான வாழ்​வா​தா​ரங்​களை உரு​வாக்​கும் வகை​யிலும் ஏற்​படுத்​தப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​து, அறக்​கட்​டளை​யின் இலச்​சினை மற்​றும் சிறப்பு புத்​தகத்தை வெளி​யிட்​டார்.

    இதையடுத்து சுற்​றுச்​சூழல் பாது​காப்பு மற்​றும் நிலை​யான வளர்ச்​சியை உறு​தி​செய்​யும் வகை​யில் மணலி, எண்​ணூர் மறுசீரமைப்பு மற்​றும் புத்​து​யிர் அமைப்பு மன்​றத்​தை​யும் தொடங்கி வைத்​து, பள்​ளி, கல்​லூரி​களுக்கு 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான மஞ்​சப்பை விருதுகளை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்​கி​னார்.

    அப்​போது அவர் பேசுகை​யில், “காலநிலை மாற்​றத்​தால் ஏற்​படும் தாக்​குதல்​களை மிகச் சரி​யாக கையாள வேண்​டிய நிலை​யில் நாம் இருக்​கிறோம். இதைக் கருத்​தில் கொண்டு கடல் பகு​தி​யில் நீடித்த வள மேலாண்​மைக்​காக ஓர் அறக்​கட்​டளையை நாம் உரு​வாக்​கி​யிருப்​பது மிக​வும் பெரு​மைக்​குரியது. அதே​போல் தொழிற்​சாலை பகு​தி​களில் மக்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களைக் கண்​டறிந்​து, நடவடிக்கை மேற்​கொள்ள மணலி, எண்​ணூர் மறுசீரமைப்பு மற்​றும் புத்​து​யிர் அமைப்பு மன்​றம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் நிலப்​பரப்பு மற்​றும் இயற்கை வளங்​களைப் பாலைவன​மா​காமல் பாது​காக்க வேண்​டிய பொறுப்பை நாம் ஏற்​றுக்​கொண்​டிருக்​கிறோம். பல்​லு​யிர் பெருக்​கத்​தில் இருக்​கும் ஒவ்​வோர் உயி​ரினங்​கள், மரங்​கள், நீர்​நிலைகள் ஆகிய​வற்றை நம் அரசு வனப் பணி​யாளர்​களின் பொறுப்​பில் விட்​டிருக்​கிறது” என்​றார்.

    முன்​ன​தாக அமைச்​சர் ராஜகண்​ணப்​பன் பேசுகை​யில், “படித்து முடித்​தவர்​களுக்கு பல்​வேறு துறை​களில் தரவரிசை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு அளிப்​ப​தில் முதல்​வர் ஸ்டா​லின் தெளி​வாக இருக்​கிறார். தகு​தி​யான நபர்​கள் நேரடி​யாக தேர்​வாணை​யம் மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படு​வது மகிழ்ச்​சி​யான விஷ​யம். இதன்​மூலம் இடைத்​தரகர்​கள் தவிர்க்​கப்​பட்​டுள்​ளனர். இன்​றைக்கு தமிழகத்​துக்கு நிறைய தொழில்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. ஏராள​மானோருக்கு வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கின்​றன. மக்​களுக்கு தேவை​யான அனைத்து வசதி​களை​யும் அரசு ஏற்​படுத்தி வரு​வ​தால், இது மக்​களுக்​கான அரசாக திகழ்ந்து வரு​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

    இந்​நிகழ்​வில் வனத்​துறை செயலர் சுப்​ரியா சாஹூ, வனத்​துறை தலை​வர் ஸ்ரீனி​வாஸ் ஆர்​.ரெட்​டி, சுற்​றுச்​சூழல் துறை இயக்​குநர் ராகுல்​நாத், தமிழ்​நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் எம்​.ஜெயந்​தி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு

    September 10, 2025
    மாநிலம்

    “மோடியும் ராதுவும் நாற்பதாண்டு கால நண்பர்கள்..!” – சிபிஆரின் சகோதரர் சி.பி.குமரேசன் பெருமித பேட்டி

    September 10, 2025
    மாநிலம்

    தமிழக தொழில் வளர்ச்சி பழனிசாமிக்கு புரியவில்லை: டி.ஆர்.பி.ராஜா

    September 10, 2025
    மாநிலம்

    அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்: ஓபிஎஸ் கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

    September 10, 2025
    மாநிலம்

    அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு: பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செப்.13 முதல் டிச.20 வரை விஜய் சுற்றுப்பயணம்: அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் தவெக மனு
    • பார் மொட்டை மாடிகள், கடற்கரைகள், பஸ் நிறுத்தங்களில் புகைபிடிப்பதை தடை செய்ய ஸ்பெயின் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கட்டிட விதிமீறல் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் தந்தைக்கு நோட்டீஸ்
    • தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு
    • “மோடியும் ராதுவும் நாற்பதாண்டு கால நண்பர்கள்..!” – சிபிஆரின் சகோதரர் சி.பி.குமரேசன் பெருமித பேட்டி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.