புதுடெல்லி: உலகளவில் மாறி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு இடையில் இந்திய கடல் பகுதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்திய கடற்படையில் 200 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தற்போது பெரிய தும் சிறியதுமாக 55 போர்க் கப்பல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மதிப்பு ரூ.99,500 கோடியாக உள்ளது. தவிர உள்நாட்டிலேயே கூடுதலாக 74 போர்க்கப்பல்களை ரூ.2.35 கோடி செலவில் உருவாக்க கடற்படை முதல் கட்ட ஒப்புதலை பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா மட்டும்தான் போர்க்கப்பல் வடிவமைப்பு, தயாரிப்பு, விமானம் தாங்கி போர்க் கப்பல் இயக்கம் ஆகியவற்றை செய்து வருகிறது’’ என்றனர். தற்போது இந்திய கடற்படையில் 140 போர்க் கப்பல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.