Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்
    மாநிலம்

    தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்​றும் தமிழக அரசுக்கு உத்​தர​வி்ட்​டுள்​ளனர்.

    இதுதொடர்​பாக மனித உரிமை​கள் செயற்​பாட்​டாள​ரான மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த அவம​திப்பு வழக்​கில், தமிழகத்​தில் டிஜிபி​யாக பதவிவகித்த சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே அடுத்த டிஜிபிக்​கான பரிந்​துரைப் பட்​டியலை தமிழக அரசு யுபிஎஸ்​சி-க்கு அனுப்​பி​யிருக்க வேண்​டும்.

    ஆனால் தற்​போது தமிழக அரசு தற்​காலிக பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை நியமித்​துள்​ளது. இவ்​வாறு தற்​காலிக டிஜிபியை நியமிக்​கக்​கூ​டாது என ஏற்​கெனவே பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அந்த உத்​தரவை தமிழக அரசு மதித்து நடக்​க​வில்லை என்​ப​தால், தமிழகத்​தில் தற்​காலிக டிஜிபியை நியமித்​துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு சட்​டத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனக்​கோரி​யிருந்​தார்.

    இந்த அவம​தி்ப்பு வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பினர். அதற்கு தமிழக அரசு தரப்​பி்ல், யுபிஎஸ்​சி-க்கு பரிந்​துரை செய்​யப்​படும் பட்​டியலில் தனது பெயரை​யும் சேர்க்க வேண்​டும் எனக்​கோரி மூத்த ஐபிஎஸ் அதி​காரி ஒரு​வர் மத்​திய நிர்​வாக தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அந்த வழக்கை தீர்ப்​பா​யம் கடந்த ஏப்​.30 அன்​று​தான் தள்​ளு​படி செய்​தது. அதை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கை உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி​தான் தள்​ளு​படி செய்​தது. ஆகவே தான் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது என விளக்​கமளிக்​கப்​பட்​டது.

    அதையேற்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை தேர்வு செய்​யும் வகை​யில் தமிழக அரசு அனுப்​பி​யுள்ள பரிந்​துரைப் பட்​டியலை யுபிஎஸ்சி விரை​வாக பரிசீலித்து தகுந்த உத்​தரவை பிறப்​பி்க்க வேண்​டும். அதன்​படி தமிழக அரசு நிரந்தர டிஜிபியை விரை​வாக தமிழகத்​தில் நியமிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டு அவம​திப்​பு வழக்​கை முடித்து வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணி: உதயநிதி தொடங்கி வைத்தார்

    September 9, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்

    September 9, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் – அமித் ஷா சந்திப்பு: மவுனம் கலைப்பது யார்?

    September 9, 2025
    மாநிலம்

    தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை

    September 9, 2025
    மாநிலம்

    “நீங்கள் தாங்க மாட்டீர்கள்… நிதானமாக பேசுங்கள்!” – உதயநிதிக்கு பழனிசாமி எச்சரிக்கை

    September 9, 2025
    மாநிலம்

    சிதம்பரத்தில் இஸ்லாமியர்கள் மோதல்: இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் – நடந்தது என்ன?

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணி: உதயநிதி தொடங்கி வைத்தார்
    • இமாச்சல பிரதேச கல்வியறிவு விகிதம்: இந்த மலை மாநிலம் “முழு கல்வியறிவு” என்று அறிவிக்கப்பட்டுள்ளது: கல்வி மற்றும் சுற்றுலா கலக்கும் ஒரு மைல்கல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு
    • “உடல் எடையை காரணம் காட்டாமல் சர்ஃபராஸ் கானை டெஸ்ட்டுக்கு கொண்டு வாங்க” – கிறிஸ் கெய்ல்
    • ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – நடவடிக்கையும் சர்ச்சையும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.