Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க முடியாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
    மாநிலம்

    முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க முடியாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்

    adminBy adminSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க முடியாது: டிடிவி.தினகரன் திட்டவட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மானாமதுரை: நண்​பர் அண்​ணா​மலையே கூறி​னாலும் பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்க முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: என்னை சந்​திக்​கவே தயங்​கும் பழனி​சாமி, எங்​களு​டன் எப்​படி கூட்​டணி சேரு​வார்? அமித்ஷா அனை​வரை​யும் ஓரணி​யில் இணைக்க முயற்​சித்​தார். ஆனால் பலனில்​லை.

    அதி​முகவைச் சேர்ந்​தவர்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று அமித்ஷா கூறி​னார். அப்​போது, முதல்​வர் வேட்​பாளர் யார் என்​ப​தைப் பொருத்து ஆதரவு அளிப்​போம் என்று நான் கூறினேன். ஓபிஎஸ் செல்​போன் அழைப்பை ஏற்​காமல் தவிர்த்த நயி​னார் நாகேந்திரன், தற்​போது சமரசம் பேசப் போவ​தாகக் கூறு​வது அகங்​காரம், ஆணவத்​தைக் காட்​டு​கிறது.

    எனக்​காக தேனி தொகுதியை விட்​டுக்​கொடுத்த ஓபிஎஸ்​-ன் சுய கவுர​வத்​துக்​குப் பாதிப்பு ஏற்​பட்​ட​தால், நான் குரல் கொடுக்கிறேன். எங்​களின் பின்னணி​யில் அண்​ணா​மலை இருப்​ப​தாக அரசி​யல் தெரி​யாதவர்​கள்​தான் கூறு​வர். நாங்​கள் கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்து செல்ல அண்​ணா​மலை காரணமல்ல. அவர் மாநிலத் தலை​வ​ராக இருந்​த​போது கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு உரிய மரி​யாதை அளித்​தார்.

    பழனி​சாமி தலை​மையை ஏற்​பது தற்​கொலைக்​குச் சமம். அதி​முக​வுடன், அமமுக தொண்​டர்​கள் இணைந்து செயல்பட மாட்​டார்​கள். அமமுக தொண்​டர்​களின் எதிர்​காலம் கருதி நான் நல்ல முடிவு எடுப்​பேன். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியி​லிருந்து ஓபிஎஸ், அமமுக வெளி​யேற நயி​னார் நாகேந்​திரன்​தான் காரணம். பழனி​சாமி மட்​டும் போதும் என்று அவர் கருதுகிறார்.

    தமிழக மக்​களின் மனநிலை அவருக்​கும், அவரைச் சார்ந்​தோருக்​கும் புரிய​வில்​லை. எங்​களை அழித்​து​விட்ட நயி​னாரை வெற்​றி​பெறச் செய்ய நாங்​கள் முட்​டாள் அல்ல. நண்​பர் அண்​ணா​மலையே கூறி​னாலும், பழனி​சாமியை முதல்​வர் வேட்​பாள​ராக ஏற்க முடி​யாது. பழனி​சாமியை தவிர வேறு யாரை முதல்​வர் வேட்​பாள​ராக அறி​வித்​தா​லும், நாங்​கள் ஏற்​றுக்​கொள்​வோம்.

    எங்​களை விமர்​சிக்​காத வரை, விஜய்யை நாங்​கள் விமர்​சிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. அவர் மக்​கள் விரும்​பும் நடிகர். அவரைப் பார்த்து பொறாமைப்​படத் தேவை​யில்​லை. யாரும் எதிர்​பார்க்​காத கூட்​டணி தமிழகத்​தில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

    நாங்​கள் இடம்​பெறும் கூட்​டணி வெற்​றி​பெறும். துரோகம் செய்த பழனி​சாமி உள்​ளிட்ட சிலரைத் தவிர, மற்​றவர்​கள் மீது எனக்கு வருத்​தம் இல்​லை. அவர்​கள் தொடர்ந்து அமைதி காத்​தால், வரும் தேர்​தலுக்​குப் பின்​னர் அதி​முக பெரும் பின்​னடைவைச் சந்திக்கும். தேர்​தலுக்கு முன்பே விழித்​துக்​கொள்ள வேண்​டும்.

    தங்​களிடம் இரட்டை இலை சின்​னம் இருக்​கிறது; பண பலம் இருக்​கிறது என்று கருதி தேர்​தலைச் சந்​தித்​தால், அதனால் ஏற்​படும் விளைவு​களுக்கு நாங்​கள் பொறுப்​பல்ல. அமமுக நிர்​வாகி​களை பழனி​சாமி விலை கொடுத்து வாங்​க முயற்​சிக்​கிறார். இவ்​வாறு டிடி​வி.​தினகரன்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

    September 9, 2025
    மாநிலம்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை

    September 9, 2025
    மாநிலம்

    நலம் காக்கும் ஸ்டாலின் 5-வது வார​ முகாம்களில் 54 ஆயிரம் பேர் பயன்

    September 9, 2025
    மாநிலம்

    “விழுதுகளை வெட்டி, வேர்களிலும் வெந்நீர் பாய்ச்சும் இபிஎஸ்!” – செங்கோட்டையன் விவகாரத்தில் சீறும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

    September 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

    September 9, 2025
    மாநிலம்

    ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்து நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் உற்சாக வரவேற்பு

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை
    • விஞ்ஞானிகள் கூறுகையில், பார்கின்சன் ஒருவர் குறைந்தபட்சம் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து தொடங்கலாம் (குறிப்பு: இது மூளை அல்ல) | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நலம் காக்கும் ஸ்டாலின் 5-வது வார​ முகாம்களில் 54 ஆயிரம் பேர் பயன்
    • “விழுதுகளை வெட்டி, வேர்களிலும் வெந்நீர் பாய்ச்சும் இபிஎஸ்!” – செங்கோட்டையன் விவகாரத்தில் சீறும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.