Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை
    தேசியம்

    4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை

    adminBy adminSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலையை புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான உத்​த​ராகண்ட் அரசு வழங்கி சாதனை படைத்​துள்​ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான பாஜக அரசு உத்​த​ராகண்​டில் அமைந்​தது. அப்​போது முதல் மக்​கள் நலத்​திட்​டங்​களை​யும், ஏராள​மான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் புஷ்கர் சிங் தாமி அரசு நிறைவேற்றி வரு​கிறது.

    முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தலை​மையி​லான அரசு இங்கு அமைந்த பின்​னர், தேர்​வு​களில் வினாத்​தாள் முன்​கூட்டி கசிவதைத் தடுக்க வகை செய்​யும் மோசடி எதிர்ப்​புச் சட்​டம் கொண்டு வரப்​பட்​டது. இதன் பின்​னர் உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் எந்​த​வித​மான அரசுத் தேர்வு வினாத்​தாள்​கள் கசிவதும் தடுக்​கப்​பட்​டது.

    மேலும், திறன் வளர்ப்​பு, உலக அளவி​லான வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை உத்​த​ராகண்ட் அரசு சிறப்​பான முறை​யில் அமல்​படுத்தி வரு​கிறது. இந்​தத் திட்​டம் மூலம் கடந்த 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் இளைஞர்​கள் அரசு வேலை​வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர். இந்​நிலை​யில் உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் உத்​த​ராகண்​டின் பழங்​குடி​யினர் நலத்​துறை நடத்​தும், அரசு ஆசிரம முறையி​லான பள்​ளி​களில் 15 உதவி ஆசிரியர்​களுக்கு பணி நியமன உத்​தரவை முதல்​வர் புஷ்கர் சிங் தாமி வழங்​கி​னார்.

    இளைஞர்​களுக்கு அரசு வேலை​வாய்ப்​பில் முன்​னுரிமை என்ற சிறப்பு நோக்​குடன் இந்த வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை உத்​த​ராகண்ட் அரசு சிறப்​பான முறை​யில் செயல்​படுத்தி வரு​கிறது. 4 ஆண்​டு​களில் 25 ஆயிரம் இளைஞர்​கள் உத்​த​ராகண்ட் மாநில பொதுத் தேர்​வாணை​யம் நடத்​திய தேர்​வு​களின் அடிப்​படை​யில் வேலை​வாய்ப்​பைப் பெற்​றுள்​ளனர்.

    மேலும் உத்​த​ராகண்ட் உதவி சேவைத் தேர்வு ஆணை​யம், உத்​த​ராகண்ட் மாநில மருத்​துவ சேவை​கள் தேர்வு ஆணை​யத்​தின் கீழும் ஏராள​மான இளைஞர்​கள் அரசு வேலை​வாய்ப்​பு​களுக்​குத் தேர்​வாகி​யுள்​ளனர். அது​மட்​டுமல்​லாமல் அரசின் கீழ் செயல்​படும் பல்​வேறு தேர்​வாணை​யங்​கள் மூலம் இளைஞர்​கள் அரசு வேலைகளுக்கு தற்​போதுதேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

    இன்​னும் சில தேர்​வாணை​யங்​கள் மூலம் இளைஞர்​கள் தேர்வு செய்​யப்​படு​வதற்​கான இறுதி பரிந்​துரை விரை​வில் வரவுள்​ளது. வெளிநாட்டில் வேலை​வாய்ப்​பு 2022-ம் ஆண்டு நவம்​பர் 9-ம் தேதி, முதல்​வரின் திறன் வளர்ப்பு மற்​றும் உலக வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்​தத் திட்​டத்​தின் கீழ் ஓட்​டல்​கள், நர்​சிங், ஆட்​டோமொபைல் உள்​ளிட்ட துறை​களில் இளைஞர்​களுக்கு பயிற்சி வழங்​கப்​பட்டு அவர்​களுக்கு ஜெர்​மனி, ஜப்​பான் நாடு​களில் வேலை​வாய்ப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. தற்​போது இதில் 154 இளைஞர்​கள் பயிற்சி பெற்று 37 பேர் ஏற்​கெனவே ஜப்​பானில் வேலை பார்த்து வரு​கின்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை

    September 9, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பை புறக்கணிக்க பிஜு ஜனதா தளம் முடிவு

    September 8, 2025
    தேசியம்

    பிஜேடி போலவே பிஆர்எஸ் கட்சியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு

    September 8, 2025
    தேசியம்

    Bihar SIR: ஆதாரை செல்லத்தக்க ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    September 8, 2025
    தேசியம்

    சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு

    September 8, 2025
    தேசியம்

    பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை
    • சிடெட் தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்
    • தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்
    • சீனா, தாய்லாந்து அல்லது வியட்நாம்: ஸ்னீக்கர்களை சிறந்த விலைக்கு வாங்க சிறந்த நாடு எது? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.