Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 
    மாநிலம்

    தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 

    adminBy adminSeptember 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வெளி​நாடு வாழ் தமிழர்​கள் அனை​வரும் ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது குடும்​பத்​துடன் தமிழகத்​துக்கு வாருங்​கள். உங்​களால் இயன்​றவரை அங்கு முதலீடு செய்​யுங்​கள் என்று லண்​டனில் நடை​பெற்ற தமிழர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் அழைப்பு விடுத்​துள்​ளார்.

    தமிழகத்தை 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் கொண்ட மாநில​மாக உரு​வாக்க அரசு தீவிர முயற்சிஎடுத்து வரு​கிறது. இதற்​காக, முதலீட்​டாளர்​கள் மாநாடு, முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக பல்​வேறு சலுகைகள் அறி​விப்பு என பல்​வேறு நடவடிக்​கைகளை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. முதலீடு​களை ஈர்க்க முதல்​வர் ஸ்டா​லின் வெளி​நாட்டு பயண​மும் மேற்​கொண்டு வரு​கிறார். அந்த வகை​யில், தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கும் வித​மாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்​வர் ஸ்டா​லின் ஐரோப்​பியநாடு​களுக்கு பயணம் மேற்கொண்டார். முதல்​கட்​ட​மாக ஜெர்​மனிக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்​தில் பயணம் மேற்​கொண்டார்.

    முதல்​வரின் இந்த பயணத்தின் போது, இந்​துஜா குழு​மம் உள்​ளிட்ட பல்​வேறு நிறு​வனங்​கள் தமிழகத்​தில் தொழில் தொடங்​குதல், விரி​வாக்​கம் செய்​தல் போன்​றவற்​றுக்கு தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் செய்​துள்​ளன. அந்த வகை​யில், முதல்​வர் ஸ்டா​லினின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணத்​தால் தமிழகம் பெற்​றுள்ள மொத்த முதலீடு ரூ.15,516 கோடி. இதன்​மூலம் 17,613 பேருக்கு வேலை​வாய்ப்​பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தின் நிறைவாக, லண்​டனில் நடை​பெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு – இங்​கிலாந்து வாழ் தமிழர்​கள் சந்​திப்​பு’ நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்டு, மாணவர்​களின் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்​தார்.

    இந்த நிகழ்​வில் அவர் பேசி​ய​தாவது: உலகின் அனைத்து பகு​தி​களி​லும் வசிக்​கும் தமிழர்​கள், மிக எளிய பின்​புலங்​களில் இருந்​து, படித்து முன்​னேறி, முக்​கிய பொறுப்​பு​களுக்கு வந்​துள்​ளனர். அவர்​கள் சுயமரி​யாதை​யுடன், மதிப்​புமிக்க இடத்​தில் இருப்​பதை பார்த்​து,திமுக தலை​வ​ராக, தமிழக முதல்​வ​ராக மிக​வும் பெரு​மைப்​படு​கிறேன். ‘தி​ரா​விடத்​தால் வாழ்​கிறோம்’ என்று பெரு​மிதத்​துடன் சொல்​லும் தமிழர்​களை பார்க்​கிறேன். அவர்​கள் தமிழகத்​தின் அறிவிக்​கப்​ப​டாத தூதர்​களாக இருக்​கின்​றனர். இதையெல்​லாம் பார்க்​கும்​போது, தமிழுக்கு தீங்கு நினைக்​கும் யாருடைய எண்​ண​மும், ஒரு​போதும் நிறைவேறாது என்ற எண்​ணம் வலுப்​பெறுகிறது.

    அடுத்த தலை​முறை தமிழர்​கள், நம்​மை​விட அதிக உயரத்​தில் இருக்க வேண்​டும். ஆண்​டுக்கு ஒரு முறை​யா​வது அனை​வரும் குடும்​பத்​துடன் தமிழகம் வாருங்​கள். அங்கு இயன்ற முதலீடு​களை செய்​யுங்​கள். உங்​கள் சகோ​தர​னாக இந்த முத்​து​வேல் கருணாநிதி ஸ்டா​லின் அங்கே இருப்​பான். அந்த நம்​பிக்​கையோடு வாருங்​கள். உலக கதவு​களை திறந்​து, சக தமிழர்​களை வளர்க்​கும் வகை​யில் இங்குள்ள வேலை​வாய்ப்​பு​கள் பற்​றி, தமிழகத்​தில் இருக்​கும் நமதுஇளைஞர்​களுக்கு எடுத்​துக் கூறவேண்​டும்.

    தமிழர்​களின் வரலாறு, பண்​பாட்டை வெளிக்​காட்ட, கீழடியை தொடர்ந்​து, பொருநை அருங்​காட்​சி​யகம், கங்​கை​கொண்ட சோழபுரம் அருங்​காட்​சி​யகம் என்று அமைத்து வரு​கிறோம். குழந்​தைகளுக்கு அதை சுற்​றிக் காண்​பித்​து,நமது வரலாற்றை எடுத்​துக் கூறவேண்​டும். பழம்​பெருமை மட்​டுமின்​றி, நாம் எவ்​வளவு வலிகள், வேதனை​களை கடந்து தலை நிமிர்ந்​துள்​ளோம் என்​ப​தை​யும் கூறவேண்​டும்.

    எப்​போதும் தமிழர்​களுக்​குள் ஒற்​றுமை நில​வவேண்​டும். இந்த இனம் எப்​போதும் முன்​னேற்​றப் பாதை​யில் மட்​டுமே பயணிக்க வேண்​டும். அதற்​காகத்​தான் தமிழகத்​தில் ஏராள​மான திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறோம். வெளி​நாடு​வாழ் தமிழர்​களுக்கு பிரச்​சினை என்​றால் ஓடோடி வந்து உதவு​கிறோம்.

    சாதி, மதம், ஏழை, பணக்​காரன் போன்ற வேறு​பாடு​கள், நம்மை பிரிப்​ப​தோடு, நமது இனத்​தையே வளர​வி​டாது. தமிழ் என்ற வேரில் வளர்ந்​திருக்​கும் நாம், நமது அடை​யாளத்தை ஒரு​போதும் மறக்க கூடாது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

    முதல்வர் தனது பயண நிறைவு குறித்து சமூக வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஜெர்​மனி​யில் தமிழர்​கள் அளித்த உற்​சாக வரவேற்​புடன் தொடங்​கிய ‘டிஎன் ரைசிங்’ பயணம், லண்​டன் மாநகரில் அவர்​கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்​ளங்​களின் எண்​ணிலடங்கா நினைவு​களு​டன் தாயகம் திரும்​பு​கிறேன். இத்​தனை நாளும் சகோ​தர​னாய் என்னை கவனித்​துக்​கொண்ட புலம்​பெயர்ந்த தமிழ் சமூகத்​துக்கு என் அன்​பை நன்​றி​யாய்​ நவில்​கிறேன்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்

    September 9, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் சந்திப்பா?

    September 9, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது: மத்திய அரசு வட்டாரம் தகவல்

    September 8, 2025
    மாநிலம்

    உளுந்தூர்பேட்டையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்

    September 8, 2025
    மாநிலம்

    “பழனிசாமி இப்போது உத்தமர் போல வேஷம் போடுகிறார்!” – கருணாஸ் சாடல்

    September 8, 2025
    மாநிலம்

    நயினாரை ‘டார்கெட்’ செய்யும் டிடிவி தினகரன்: பின்னணியில் அண்ணாமலையா?

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பா? – தூத்துக்குடி உட்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை
    • சிடெட் தேர்வுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும்
    • தற்காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம்
    • சீனா, தாய்லாந்து அல்லது வியட்நாம்: ஸ்னீக்கர்களை சிறந்த விலைக்கு வாங்க சிறந்த நாடு எது? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.