Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபியில் 2-வது நாளாக தொடரும் அதிமுகவினரின் ‘மாஸ்’ ராஜினாமா
    மாநிலம்

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபியில் 2-வது நாளாக தொடரும் அதிமுகவினரின் ‘மாஸ்’ ராஜினாமா

    adminBy adminSeptember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபியில் 2-வது நாளாக தொடரும் அதிமுகவினரின் ‘மாஸ்’ ராஜினாமா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 6-ம் தேதி கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்த சிலரையும் நீக்கினார் இந்த நிலையில் கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நேற்று நம்பியூர் பகுதியில் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து இன்றும் கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சி பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு இரண்டாவது நாளாக கடிதம் அனுப்பி வருகின்றனர்.

    ராஜினாமா செய்தவர்கள், அதிமுக பழைய வலிமையை பெற வேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும். என கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கூறியிருந்தார். அதற்கு தாங்கள்( பொதுச்செயலாளர் ) அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுகிறோம் எனவும் கட்சி ஒன்றுபட்டால் பதவியில் நீடிப்போம் என்றும் அவர்கள் ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியுள்ளனர் .

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி சத்யாபாமா கூறுகையில், “மக்களுக்காக நினைத்த திட்டங்கள் செய்ய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த இயக்கம் ஒன்றுபட பாடுபடுவோம். வெற்றியை ஜெயலலிதா பாதத்தில் சமர்ப்பிப்போம். பலரும், ராஜினாமா செய்து வருவதால் எவ்வளவு பேர் என்று போகப்போகத் தான் தெரியும். ராஜினாமா செய்பவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்கிறார்கள்.

    நான் எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான சத்யாபாமா தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் கட்சி முகவர்கள் உறுதி அளிக்க வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல் 

    December 2, 2025
    மாநிலம்

    நீர் நிலைகளில் குளிக்க தடை விதிக்க தமிழக அரசு அறிவுரை

    December 2, 2025
    மாநிலம்

    ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு

    December 2, 2025
    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் 

    December 2, 2025
    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை

    December 2, 2025
    மாநிலம்

    வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி
    • அப்துல் கலாமின் வாசிக்கும் ஆர்வமும் வழிகாட்டியும்!
    • 20 நிமிடங்களில் மூன்று முறை ‘அடி’ – ரிஷப் பண்ட்டை படுத்தி எடுத்த மோர்க்கி!
    • உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை
    • நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.