Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: என்ன செய்யப்போகிறார் பழனிசாமி?
    மாநிலம்

    செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: என்ன செய்யப்போகிறார் பழனிசாமி?

    adminBy adminSeptember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    செங்கோட்டையனின் கருத்தை வரவேற்கும் அதிமுக தொண்டர்கள்: என்ன செய்யப்போகிறார் பழனிசாமி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் கட்சி தொடங்கி 53 ஆண்​டு​களை கடந்த அதி​முக, 31 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. அடுத்​தடுத்து ஆட்​சியை பிடித்த ஒரே கட்​சி​யும் அதி​முக தான். கட்​சியை கைப்​பற்​றிய பழனி​சாமி, உட்​கட்சி விவ​காரத்​தில் நீதி​மன்​றத்​தில் தொடர் வெற்​றியை பெற்​றாலும், பொதுத் தேர்​தல்​களில் தோல்வி முகமே மிஞ்​சி​யது. 2024 தேர்​தலில் ஒரு தொகு​தி​யிலும் வெற்​றி​பெற முடிய​வில்​லை.

    மேலும் அன்​வர் ராஜா, வா.மைத்​ரேயன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் கட்​சியி​லிருந்து வெளி​யேறி வரு​கின்​றனர். கட்சி பிரிந்து கிடப்​பதே அதி​முக​வின் தோல்விக்கு காரணம். கட்சி ஒன்​றிணைந்​தால் மட்​டுமே திமுகவை வீழ்த்த முடி​யும் என முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், சசிகலா ஆகியோர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

    இதற்​கெல்​லாம் பிடி​கொடுக்​காத பழனி​சாமி, கட்​சியை ஒன்​றிணைக்​காமலேயே 2026-ல் அதி​முக ஆட்​சியை பிடிக்க கடந்த ஜூலை மாதமே தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​விட்​டார். இந்​நிலை​யில் ஈரோடு, கோபிச்​செட்​டி​பாளை​யத்​தில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன், “கட்​சியி​லிருந்து வெளியே சென்​றவர்​களை 10 நாட்​களுக்​குள் இணைக்க வேண்​டும். இல்​லா​விட்​டால், அவர்​களை இணைத்து கட்​சியை ஒன்​று​படுத்த நான் பாடு​படு​வேன்” என தெரி​வித்​துள்​ளார். இவரது கருத்​துக்கு சசிகலா, பன்​னீர்​செல்​வம் ஆகியோர் ஆதரவு தெரி​வித்​துள்​ளனர்.

    இந்​நிலை​யில் நேற்று செங்​கோட்​டையனின் மாவட்ட செய​லா​ளர் பதவி மற்​றும் அமைப்பு செய​லா​ளர் பதவி​களை பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பறித்​துள்​ளார். மேலும் அவரது ஆதர​வாளர்​கள் 7 பேரின் பதவி​களை​யும் பறித்தார். இதைத் தொடர்ந்து செங்​கோட்​டையனின் ஆதர​வாளர்​கள் முன்​னாள் எம்​.பி. சத்​ய​பாமா உள்​ளிட்ட 100-க்​கும் மேற்​பட்​டோர், தங்​களை​யும் கட்சி பதவி​களில் இருந்து நீக்​கு​மாறு பழனி​சாமிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர். மேலும் கட்​சி​யின் அண்​மைக்​கால போக்கு பிடிக்​காமல், தமிழகம் முழு​வதும் கட்சி பணி​களில் இருந்து வில​கி​யுள்ள அதி​முக​வினர் செங்​கோட்​டையனின் வலி​யுறுத்​தலுக்கு பலம் சேர்க்க குரல் கொடுத்து வரு​கின்​றனர்.

    சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களைச் சேர்ந்த அதி​முக தொண்​டர்​கள் கூறியது: பழனி​சாமி தனது சுயநலத்​துக்​காகவே கட்சி ஒன்​றிணைப்​புக்கு மறுக்​கிறார். கட்சி நலனுக்​காக தனது பிடி​வாதத்தை தளர்த்த வேண்​டும். எதற்​கெடுத்​தா​லும், அம்​மா​வின் அரசு, எனது தலை​மையி​லான அம்​மா​வின் அரசு என்​றெல்​லாம் பேசி வரும் பழனி​சாமி, ஜெயலலி​தாவுக்கு வழங்​கப்​பட்ட நிரந்தர பொதுச்​செய​லா​ளர் பதவியை பறித்து தான் அதி​முக பொதுச்​செய​லா​ள​ராக இருந்து வரு​கிறார்.

    இச்​செயலுக்கு முன்​பு, சசிகலா, ஓபிஎஸ், செங்​கோட்​டையனின் நடவடிக்​கைகள் ஒன்​றுமே இல்​லை. 2026 தேர்​தலில் வெற்றி பெற கட்சி ஒன்​றிணைப்பு அவசி​யம். செங்​கோட்​டைையனின் கோரிக்​கையை பரிசீலிக்க வேண்​டும். இவ்வாறு கூறினர். செங்​கோட்​டையனின் விதித்​திருக்​கும் காலக்​கெடு தொடர்​பாக பழனி​சாமி ஆதர​வாளர்​கள் கூறும்​போது, “ஓ.பன்​னீர்​செல்​வம், சசிகலா ஆகியோ​ருக்கு அதி​முக​வில் இடமில்லை என்​ப​தில் பழனி​சாமி உறு​தி​யாக உள்​ளார்.

    அவர்​கள் இல்​லாமலேயே 2026 தேர்​தலில் அதி​முக​வின் வெற்​றியை பழனி​சாமி நிலை​நாட்​டு​வார். அதி​முக பல சோதனை​களை கடந்​து, இன்​றும் உயிர்ப்​போடு இருக்​கிறது. இத்​தனை ஆண்​டு​களாக கட்சி ஒற்​றுமையை வலி​யுறுத்தி தர்​ம​யுத்​தம் செய்து வந்த பன்​னீர்​செல்​வத்​தின் நிலை, தி​முக​விடம் தஞ்​சமடை​யும் அளவுக்கு சென்​று​விட்​டது. செங்​கோட்​டையனின் கெடு​வை, பழனி​சாமி பொருட்​படுத்த மாட்​டார். அவர் வகுத்​துள்​ள வழி​யில்​ அவர்​ பயணத்​தை, தொடர்​வார்​” என்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செங்கோட்டையனை ஆதரித்த சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை

    September 7, 2025
    மாநிலம்

    ‘ஏர்போர்ட்’ மூர்த்தி மீது விசிகவினர் தாக்குதல்: டிஜிபி அலுவலகம் அருகே நடந்தது என்ன?

    September 7, 2025
    மாநிலம்

    ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

    September 7, 2025
    மாநிலம்

    பாஜகவின் 25 அணிகளுக்கு அமைப்பாளர்கள் நியமனம்: நயினார் நாகேந்திரன் மகனுக்கு புதிய பொறுப்பு

    September 7, 2025
    மாநிலம்

    மதுரை செல்லும் பயணிகளுக்கு மன உளைச்சல்: சென்னை விமான நிலைய குளறுபடிக்கு தீர்வு காண வலியுறுத்தல்

    September 7, 2025
    மாநிலம்

    தினகரன், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு திரும்புவார்கள்: அண்ணாமலை நம்பிக்கை

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 200-வது படத்தை அறிவிக்கிறார் அக்‌ஷய் குமார்!
    • செங்கோட்டையனை ஆதரித்த சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை
    • வெறுங்காலுடன் நடைபயிற்சி Vs ஷூஸ்: எந்த நுட்பம் ஆரோக்கியமானது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேனிலவில் கணவன் கொலை வழக்கு: சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
    • ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா – ஜப்பான் ஆட்டம் டிரா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.