Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»பழங்குடியினரின் கல்விப் புரட்சி; இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் – கல்வி விளக்கேற்றிய பழங்குடியினர் நலத்துறை
    கல்வி

    பழங்குடியினரின் கல்விப் புரட்சி; இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் – கல்வி விளக்கேற்றிய பழங்குடியினர் நலத்துறை

    adminBy adminSeptember 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பழங்குடியினரின் கல்விப் புரட்சி; இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் – கல்வி விளக்கேற்றிய பழங்குடியினர் நலத்துறை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சமூகநீ​திக் கொள்​கைகளை செயல்​வடி​வில் சாத்​தி​ய​மாக்​கியதற்கு சான்​றுகளில் ஒன்​றாக பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் கல்​வி​சார் சாதனை​கள் விளங்​கு​கின்​றன. இந்​தி​யா​வில் முதன்​முறை​யாக, பழங்​குடி​யின மாணவர்​களின் கல்வி வாழ்க்​கை​யில் ஒரு பிரம்​மாண்​ட​மான புரட்​சியை ஏற்​படுத்​தி​யிருக்​கிறது. 2025-ம் ஆண்டு தேசிய அளவில் நடை​பெற்ற போட்​டித் தேர்​வு​களில், பழங்​குடி​யினர் உண்டு உறை​விடப் பள்ளி மாணவர்​கள் ஈட்​டி​யிருக்​கும் வெற்​றிகள், ஒரு நீண்​ட​கால கனவின் நனவாக வெளிப்​பட்​டுள்​ளன.

    கடந்த ஆண்​டை​விட கூடு​தலாக 20 மடங்கு அளவுக்கு கிடைத்​துள்ள இந்த வெற்​றிகளில் குறிப்​பிடத்​தக்க சில மைல்​கற்​கள் நம் கவனத்தை ஈர்க்​கின்​றன. அதன்​படி மாணவி ராஜேஸ்​வரி, சென்னை ஐஐடி​யில் விண்​வெளிப் பொறி​யியல் துறை​யில் சேர்ந்​திருப்​பதும் கடல்​சார் பல்​கலைக்​கழகம் மற்​றும் சென்னை ஐஐடி-​யில் போன்ற உயரிய கல்வி நிறு​வனங்​களில் பழங்​குடி​யின மாணவி​கள் முதன்​முறை​யாக இடம் பிடித்​திருப்​பதும் பழங்​குடி சமூகத்​தில் பெண்​கள் அடைந்​திருக்​கும் முன்​னேற்​றத்தை வெளிப்​படுத்​துகிறது.

    இந்த சாதனை​களின் பின்​னணி​யில், பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் தொடர்ச்​சி​யான, அர்ப்​பணிப்பு உள்​ளது. மாணவர்​களுக்கு தொடர்ந்து பயிற்சி வகுப்​பு​களும் ஆயத்​தப் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டது. மேலும் ஆங்​கில மொழிப் புலமை, ஆளுமை மேம்​பாடு, குழு விவாதம் போன்ற திறன்​களை வளர்க்​க​வும் 15 நாட்களுக்கு ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நீதி என்​பது அனை​வருக்​கும் சம வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது என்​பதை இந்​திய சமூக அமைப்​புக்கே ஒரு புதிய திசையை பழங்​குடி​யினர் நலத்​துறை காட்​டி​யுள்​ளது.

    அரசு ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறைச் செய​லா​ளர் லட்​சுமி பிரியா ஐஏஎஸ் கூறும்​போது, “மாணவர்​களின் இந்​தச் சாதனைக்​குத் தமிழக முதல்​வர் ஆசிரியர்​களுக்கு முதல் நன்றி சொல்ல வேண்​டும். உயர்​கல்வி சேர்க்​கைக்​கான பயிற்​சி​யை​யும் நிதி​யைத் தடை​யின்றி அரசு வழங்​கியது. இதன் விளை​வாக, மாணவர்​கள் இலக்கை அடைந்​தனர். எல்​லாத் தடைகளை​யும் தகர்த்​து, மாணவர்​கள் சாதித்​துள்​ளனர்” என்​றார்.

    கிருஷ்ணவேணி (கரியகோ​யில்​வளவு): பள்​ளி​யில் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் கிடைத்த பயிற்சி மற்​றும் திறன் பயிற்​சிகள் பயனுள்​ள​தாக இருந்​தன. இந்த முயற்​சிகள் எங்​கள் சமூகத்​துக்கு நம்​பிக்​கையை அளித்​துள்​ளது. அதன் விளை​வாக, எனக்கு ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்​கலைக்​கழகத்​தில் ஏவி​யானிக்ஸ் இன்​ஜினியரிங் படிக்க இடம் கிடைத்​துள்​ளது.

    ஆதித்​யன் (செங்​கரைப்​பள்​ளி): எனக்கு ஒரு புதிய பாதையைத் திறந்​து​வைத்த என் ஆசிரியர்​கள், தலைமை ஆசிரியர், இத்​துறை​யின் இயக்​குநர், மற்​றும் தமிழ்​நாடு அரசுக்கு என் மனமார்ந்த நன்​றி. இப்​போது நான் இந்​திய கடல்​சார் பல்​கலைக்​கழகத்​தில் (கொல்​கத்​தா) பி.டெக், கடல்​சார் பொறி​யியல் படித்து வரு​கிறேன்.

    ஞானபிர​காசம்: அம்மா தினக்​கூலி வேலை பார்க்​கிறார். எங்​கள் குடும்​பத்​தின் ஒட்​டுமொத்த நம்​பிக்கை கல்வி மட்​டுமே. எனக்​குக் கிடைத்த இந்த வாய்ப்பு எங்​கள் குடும்​பத்​தின் நிதி நிலையை மேம்​படுத்​தும் என்று நம்​பு​கிறேன். இந்தஅரிய வாய்ப்பை வழங்​கிய அரசுக்​கும், துறைச் செய​லா​ளர் மற்​றும் இயக்​குநருக்​கும் எனது நன்​றிகள்.


    இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டில் சேர்க்கைப் பெற்ற பழங்குடி மாணவர்கள்.

    எட்டாத உயர்கல்வியை எட்டிப்பிடித்த பழங்குடி மாணவர்கள்: தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் 42 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் – 39 பேர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்- 3, கிளாட் தேர்வு – 3, இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம்- 10, தேசிய ஹோட்டல் மேலாண்மை நிறுவனம்- 2, மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்- 9, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்- 6, ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம்- 9, ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனம்- 4, பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி- 16, அண்ணா பல்கலைக்கழகம்- 6, புதுச்சேரி பல்கலைக்கழகம்- 8, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்- 1, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பாகல்பூர்- 3, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹேண்ட்லூம்- 1, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு ஐடி, கோரக்பூர் – ஒரு மாணவர் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    விளையாட்டுப் பிரிவில் 5 புதிய பாடங்கள்: தேசிய திறந்தநிலை பள்ளி தகவல்

    September 8, 2025
    கல்வி

    ஆசிரியர்கள் கல்வித் தகுதியை உறுதி செய்ய வேண்டும்; அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

    September 7, 2025
    கல்வி

    கிராமப்புற மாணவிகளுக்கான ஊக்கத்தொகை: தொடக்கக் கல்வி துறை நடவடிக்கை

    September 7, 2025
    கல்வி

    ஆசிரியர் தேர்வு வாரியம் நவம்பரில் நடத்த உள்ள ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

    September 7, 2025
    கல்வி

    மாணவர்கள் தோல்வி அடைந்தால் துவண்டு போகக் கூடாது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை

    September 7, 2025
    கல்வி

    கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 4 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: புஷ்கர் சிங் தாமி தலைமையிலான உத்தராகண்ட் அரசு சாதனை
    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு
    • ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் வேலை: ஒரு நாளுக்கு ரூ.522 சம்பளம்
    • தமிழகத்தில் இயன்றவரை முதலீடு செய்ய வேண்டும்: லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு 
    • பொது சிறுநீர் கழிப்பதை ஆட்சேபித்ததற்காக ஹரியானா மனிதன் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார் – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.