Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு
    ஆன்மீகம்

    திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருச்செந்தூர் கோயிலில் ரூ.500-க்கு பிரேக் தரிசன முறை அமல் – பக்தர்கள் கடும் எதிர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை அமல்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசேஷ நாட்கள், விடுமுறை காலங்கள், திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் கூட (வியாழன் முதல் ஞாயிறு வரை) பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இக்கோயிலில் பொதுதரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகளில் தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்படுத்த உத்தேசித்து அறிவிப்பாணையை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு எண் 206-ல் பக்தர்கள் பெருவாரியாக வரும் கோயில்களில் தினசரி ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசன வசதி (பிரேக் தரிசனம்) ஏற்படுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து பக்தர் ஒருவருக்கு ரூ.500 கட்டண சீட்டில் இடை நிறுத்த தரிசனம் நடைமுறைக்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இதில் தைப்பூசம் (5 நாள்), மாசித்திருவிழா (10 நாள்), பங்குனி உத்திர திருவிழா (3 நாள்), சித்திரை வருட பிறப்பு (1 நாள்), வைகாசி விசாகம் (5நாள்), ஆவணி திருவிழா (5 நாள்), நவராத்திரி உற்சவம் (5 நாள்), கந்த சஷ்டி திருவிழா (10 நாள்), அமாவாசை, பவுர்ணமி (வருடத்துக்கு 24 நாள்) என மொத்தம் 68 நாட்களும், நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் இதர நாட்களிலும் பிரேக் தரிசனம் கிடையாது.

    இதுகுறித்து ஆட்சேபனைகள், ஆலோசனைகள் இருப்பின் கோயில் இணை ஆணையருக்கு பக்தர்கள் எழுத்து பூர்வமாக செப். 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோயில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மாதந்தோறும் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் கோடிக்கணக்கி்ல் வருவாய் வரும் நிலையில் ரூ.500 கட்டண தரிசன முறையை அமல்படுத்துவது தேவையற்றது என அவர்கள் கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

    September 3, 2025
    ஆன்மீகம்

    பழநி வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    September 2, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்

    September 2, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

    September 1, 2025
    ஆன்மீகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    August 30, 2025
    ஆன்மீகம்

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் ‘மகிழ்ச்சியே’: செங்கோட்டையன்
    • அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு திட்டங்கள்: இபிஎஸ் பேச்சு
    • செப்டம்பர் 7 அன்று இரத்த மூன்: இது அமெரிக்காவில் தெரியுமா? நேரங்கள், இருப்பிடங்கள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கால்நடை ஆய்வாளர் பதவிக்கு பட்டப்படிப்பு அவசியம்: புதிய கல்வித் தகுதி நிர்ணயம்
    • தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ குறித்து பயிற்சி: அன்பில் மகேஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.