Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
    மாநிலம்

    ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த பா.அன்புவேள் என்பவர் சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பேரூர் வட்டம், வடவள்ளி கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ள கோப்பினை, பார்வையிட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ரா.பிரியகுமார் மனுதாரர் கோரிய தகவல்கள் அடங்கிய கோப்பு, தேடிப் பார்த்ததில் கிடைக்கப் பெறவில்லை என்று தகவல் அலுவலர் வழங்கியுள்ளதை இவ்வாணையம் ஏற்க மறுப்பதகாவும் கோப்பு கிடைக்கப் பெறவில்லை என்று பொது அதிகார அமைப்பு தெரிவிக்கும் பதில் அவர்களின் அலட்சிய போக்கையும், கவனக்குறைவையும் பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் ஒரு மாத காலத்திற்குள் வருவாய் கோட்டாட்சியர், கோரிய கோப்பினை மீண்டும் தேடி கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு, கிடைக்கப் பெற்றால் அதன் நகலினை மனுதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும், கிடைக்கப் பெறவில்லை என்றால் அதற்கான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கடிதம் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள அனைத்து நிலை அலுவலகங்களிலும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படுவது தொடர்பான நடைமுறைகளை பிறப்பித்து, அதனை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தும், கோப்புகள் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அத்துடன், கோப்பு கிடைக்கப் பெறவில்லை எனில் கோப்பினை மீள உருவாக்க நேரிடும் (Reconstruction offiles) என்பதை அறிவுறுத்தியும், கோப்புகள் அழிக்கப்படும் போது பின்பற்றுவதற்கான நடைமுறைகளின் அவசியத்தை அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து அறிக்கையை பெற்று, அவற்றை இணைத்து ஒருங்கிணைந்த அறிக்கையாக நேரில் சமர்ப்பிக்குமாறு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.

    மனுதாரர்கள் தகவல்கள் கோரும் கோப்பு கிடைக்கப்பெறாத பட்சத்தில், அது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதனை தொடர்ந்து ( Non Traceable Certificate) ஆகியவற்றை பெற்று கோப்பில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி நில உடமை ஆவணங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலக பதிவறையில் பராமரிக்கப்பட வேண்டிய நிரந்தர ஆவணங்களாகும் அதனை பெறுப்புடன் பாதுகாக்க வேண்டியது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வருவாய் துறை சம்மந்தப்பட்ட அலுவலகத்தைச் சார்ந்த அதிகாரிகள் அலுவலர்களின் கடமையாகும் என உத்தரவிட்டுள்ள ஆணைய உறுப்பினர் பிரிய குமார், வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 30-ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

    மேற்கண்ட உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற தவறினால், தகவல் பெறும் உரிமைச் சட்டம், கீழ் ரூ.25,000 அபராதம் விதிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் மேல்முறையீட்டு இழப்பீடு வழங்குதல் போன்ற தண்டனை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கவும் நேரிடும் என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்களுக்கு ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு

    September 6, 2025
    மாநிலம்

    விஜய்யுடன் ரங்கசாமி கூட்டணி வைத்தால் புதுச்சேரிக்கு நல்லது செய்ய முடியாது! – பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் பேட்டி

    September 6, 2025
    மாநிலம்

    தனது சாதிக்காரரை இளைய ஆதீனமாக்குவதற்காக என்னை புறக்கணிக்கிறார்! – மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஸ்வலிங்க தம்பிரான் வில்லங்க புகார்

    September 6, 2025
    மாநிலம்

    அன்​பு, அறம், அமை​தி, ஒற்​றுமை தழைக்​கட்​டும்: முதல்​வர், தலை​வர்​கள் ஓணம் திரு​நாள் வாழ்த்து

    September 6, 2025
    மாநிலம்

    ‘ஒன்றுபட்ட அதிமுக’ – செங்கோட்டையனின் ‘வார்னிங்’ அழைப்பு எடுபடுமா?

    September 6, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்த செங்கோட்டையன் – அதிமுக ‘நிலவரம்’ மீதான தலைவர்கள் பார்வை என்ன?

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு
    • பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது
    • விஜய்யுடன் ரங்கசாமி கூட்டணி வைத்தால் புதுச்சேரிக்கு நல்லது செய்ய முடியாது! – பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் பேட்டி
    • தனது சாதிக்காரரை இளைய ஆதீனமாக்குவதற்காக என்னை புறக்கணிக்கிறார்! – மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஸ்வலிங்க தம்பிரான் வில்லங்க புகார்
    • ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும்’ – நிர்மலா சீதாராமன் பகிர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.