Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்கு: அன்புமணி கோரிக்கை
    மாநிலம்

    ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்கு: அன்புமணி கோரிக்கை

    adminBy adminSeptember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்கு: அன்புமணி கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும். ஒற்றை அடுக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிஎஸ்டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, மத்திய அரசால் வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. அடித்தட்டு மக்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    இது வரை நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள், 40% வரிப் பிரிவு இல்லாமல் 5%, 18% என இரட்டை அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன. இதனால் மின்னணு பொருள்கள், செல்பேசிகள், வாகனங்கள், காப்பீடுகள் ஆகியவற்றின் வரி குறைக்கப்படவுள்ளன.

    இதனால், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதைப் போல தோன்றினாலும், வணிகம் அதிகரித்து அதிக எண்ணிக்கையில் ஒவ்வொரு பொருளும் விற்பனை செய்யப்படும் போது மிகக் குறுகிய காலத்தில் அந்த வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும். அதுமட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இந்த சீர்திருத்தம் வகை செய்யும்.

    உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவற்றின் மீதான வரி 40% அதிகரிக்கப்பட்டிருப்பது மிகவும் சரியானது. அதேநேரத்தில் பீடியின் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 40% ஆக அதிகரிக்கப்படுவதற்கு பதிலாக 18% ஆக குறைக்கப்பட்டிருப்பது, பரோட்டா போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இட்லி, தோசை போன்றவற்றுக்கு 5% வரி விதிக்கப்படுவது போன்ற திருத்தப்பட வேண்டிய குறைகளும் உள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும்.

    சிங்கப்பூரில் உள்ளது போன்ற ஒற்றை அடுக்கு ஜி.எஸ்.டியை நோக்கி பயணிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்; அதேபோல், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

    September 5, 2025
    மாநிலம்

    விஜய் மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய வழக்கு: போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்

    September 5, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    September 5, 2025
    மாநிலம்

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதியின்றி தனது பாடல்கள் பயன்பாடு: இளையராஜா வழக்கு

    September 5, 2025
    மாநிலம்

    செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன்

    September 5, 2025
    மாநிலம்

    அதிமுக ஒன்றிணைய செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது: நயினார் நாகேந்திரன் 

    September 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்
    • இந்திய ஜவுளித் துறை இனி..? – ஜிஎஸ்டி 2.0 தாக்கம் பகிரும் திருப்பூர் தொழில் துறையினர்
    • நேபாளத்திற்கு செல்கிறீர்களா? இந்த சமூக ஊடக பயன்பாடுகள் இப்போது வரம்பற்றவை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கூடுதல் கட்டணம்: மருத்துவக் கல்வி கற்க முடியாமல் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர் தவிப்பு
    • விஜய் மாநாட்டில் தொண்டரை தூக்கி வீசிய வழக்கு: போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க காவல்துறை அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.