Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிரதமர், அவரது தாயாருக்கு எதிரான கருத்தை கண்டித்து பிஹாரில் இன்று முழு அடைப்புக்கு என்டிஏ அழைப்பு
    தேசியம்

    பிரதமர், அவரது தாயாருக்கு எதிரான கருத்தை கண்டித்து பிஹாரில் இன்று முழு அடைப்புக்கு என்டிஏ அழைப்பு

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிரதமர், அவரது தாயாருக்கு எதிரான கருத்தை கண்டித்து பிஹாரில் இன்று முழு அடைப்புக்கு என்டிஏ அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப். 1-ம் தேதி வரை வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடை​பெற்​றது. இந்​நிலை​யில் தர்​பங்கா நகரில் அண்​மை​யில் இந்த யாத்​திரை​யின்​போது எதிர்க்கட்​சிகளின் ஒரு மேடை​யில், பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசப்​பட்​டது. காங்​கிரஸ் தொண்​டர்​களின் இந்​தப் பேச்​சுக்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

    இந்​நிலை​யில் பிரதமர் மோடி மற்​றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசி​யதற்கு எதி​ராக பிஹாரில் இன்று மாநிலம் தழு​விய முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ஆளும் என்​டிஏ கூட்​டணி அழைப்பு விடுத்​துள்​ளது.

    இதுகுறித்து பாஜக மாநிலத் தலை​வர் திலீப் ஜெய்​ஸ்​வால் நேற்று கூறுகை​யில், ‘‘காலை 7 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை முழு அடைப்பு அனுசரிக்​கப்​படும். என்​றாலும் ரயில் போக்​கு​வரத்து உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய சேவை​களுக்கு எந்த பாதிப்​பும் இருக்​காது. இந்​தப் போராட்​டத்​துக்கு மகளிர் அணி தலைமை வகிக்​கும்’’ என்​றார்.

    ஐக்​கிய ஜனதா தளம் தலை​வர் உமேஷ் குஷ்​வாகா கூறுகை​யில், “எதிர்க்​கட்​சிகளின் பேரணி​யில் பிரதமர் மற்​றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசி​யது தார்​மீக ரீதி​யாக​வும் அரசி​யல் ரீதி​யாக​வும் தவறு. இதற்கு இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் இது​வரை மன்​னிப்பு கேட்​க​வில்​லை.

    நமது தாயார் மற்​றும் சகோ​தரி​களை அவர்​கள் அவம​தித்​துள்​ளனர். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து முழு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளோம். முழு அடைப்​பின்​போது மாநிலம் முழு​வதும் மகளிர் அணி போராட்​டங்​கள் நடத்​தும்’’ என்​றார். இதற்கிடை​யில் பிரதமர் மோடி, தன்​னை​யும் மறைந்த தனது தாயார் பற்​றி​யும் அவதூறாக பேசப்​பட்​டதை அறிந்து மிக​வும் வருந்திய​தாக கூறி​னார்.

    இதுபற்றி அவர் கூறும்​போது, “அரசி​யலுடன் எந்​தத் தொடர்​பும் இல்​லாத, இப்​போது உயிருடன் இல்​லாத எனது தாயார் பற்றி காங்கிரஸ், ஆர்​ஜேடி நிகழ்ச்​சி​யில் அவதூறாக பேசி உள்​ளனர். சகோ​தரி​களும் தாய்​மார்​களும் உணர்ந்த வலியை என்​னால் உணர முடிகிறது. இது மிக​வும் வேதனை​யானது. அரச குடும்​பத்​தில் தங்​கம், வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த இளவரச​ரால்​ ஏழைத்​ தா​யின்​ வலியை புரிந்​து​கொள்​ள முடி​யாது’’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

    September 4, 2025
    தேசியம்

    தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு

    September 4, 2025
    தேசியம்

    வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

    September 4, 2025
    தேசியம்

    காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை தவிர்க்கலாம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

    September 4, 2025
    தேசியம்

    பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு

    September 4, 2025
    தேசியம்

    டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீலாது நபி தினத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
    • எங்கள் இறுதி தருணங்களில் உண்மையில் என்ன நடக்கிறது: பெரியவர்களும் குழந்தைகளும் மரணத்தை வித்தியாசமாக அனுபவிக்கிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சந்திர கிரஹான் 2025: இது ஏன் இரத்த மூன் என்று அழைக்கப்படுகிறது? இந்தியாவில் எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
    • தமிழகம் மற்ற மாநிலங்களை போல எதையும் உடனே நம்பிவிடாது: துணை முதல்வர் உதயநிதி கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.