Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
    ஆன்மீகம்

    ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை முன்னிட்டு கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டனர். நான்கு சித்திரை வீதிகள், கீழ மாசி வீதி, யானைக்கல் வழியாக ஆதி சொக்கநாத கோயில், திருமலை ராயர் படித்துறை, அனுமார்கோயில் படித்துறை, வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக பிட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தளி, பின்பு வாணிய வைசியர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெற்றது. பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். அங்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இங்கு பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 10-ம் நாளான நாளை (செப்.4) விறகு விற்ற திருவிளையாடல் நடைபெறவுள்ளது.

    பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: ”வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். அப்போது பிட்டு விற்கும் கிழவியான வந்தி, தனக்கு யாரும் இல்லையே என்று எண்ணி இறைவனிடம் வேண்டினார். அப்போது சிவபெருமானே, கூலியாள் வடிவில் வந்து, வந்திக்கிழவி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால் தன் பங்குக்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டுவிட்டு. ஆடிப்பாடி, ஆழ்ந்து உறங்கினார்.

    அப்போது அங்கு வந்த மன்னன், தன் கையிலிருந்த பிரம்பால் வேலை பார்க்காமல் உறங்கிக்கொண்டிருந்த கூலியாள் முதுகில் அடித்தார், அடித்த அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அடி விழுந்தது. அப்போது மன்னன் தாம் அடித்தது இறைவன் என்னும் உண்மையை உணர்ந்தான். இறைவன் அசரீரியாக தோன்றி, மாணிக்க வாசகர் பெருமையை உணர்த்தவும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்வதாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்க வாசகரை இறைபணிக்கு விடுவித்து. தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    பழநி வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    September 2, 2025
    ஆன்மீகம்

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் செப்.24-ல் தொடக்கம்

    September 2, 2025
    ஆன்மீகம்

    ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

    September 1, 2025
    ஆன்மீகம்

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    August 30, 2025
    ஆன்மீகம்

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா

    August 27, 2025
    ஆன்மீகம்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சசிகுமாரை காவு வாங்கிய கல்குவாரி உரிமைப் பிரச்சினை… – சங்கிலிக்கரடை சுரண்டிக் கொழிக்கும் அரசியல்வாதிகள்!
    • இயற்கையாகவே வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை எவ்வாறு அகற்றுவது: வல்லுநர்கள் காரணங்கள், தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் இரு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
    • இதய ஆரோக்கியத்திலிருந்து நீரிழிவு ஆபத்து வரை: ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பற்றி கழுத்து அளவு வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.