Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
    ஆன்மீகம்

    ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை முன்னிட்டு கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டனர். நான்கு சித்திரை வீதிகள், கீழ மாசி வீதி, யானைக்கல் வழியாக ஆதி சொக்கநாத கோயில், திருமலை ராயர் படித்துறை, அனுமார்கோயில் படித்துறை, வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக பிட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தளி, பின்பு வாணிய வைசியர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடைபெற்றது. பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர். அங்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், திருவாதவூர் மாணிக்கவாசகர் சுவாமியும் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இங்கு பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணியளவில் அங்கிருந்து வெள்ளி ரிஷப வாகனங்களில் புறப்பாடு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 10-ம் நாளான நாளை (செப்.4) விறகு விற்ற திருவிளையாடல் நடைபெறவுள்ளது.

    பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்: ”வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டார். அப்போது பிட்டு விற்கும் கிழவியான வந்தி, தனக்கு யாரும் இல்லையே என்று எண்ணி இறைவனிடம் வேண்டினார். அப்போது சிவபெருமானே, கூலியாள் வடிவில் வந்து, வந்திக்கிழவி தந்த பிட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால் தன் பங்குக்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டுவிட்டு. ஆடிப்பாடி, ஆழ்ந்து உறங்கினார்.

    அப்போது அங்கு வந்த மன்னன், தன் கையிலிருந்த பிரம்பால் வேலை பார்க்காமல் உறங்கிக்கொண்டிருந்த கூலியாள் முதுகில் அடித்தார், அடித்த அந்த அடி அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அடி விழுந்தது. அப்போது மன்னன் தாம் அடித்தது இறைவன் என்னும் உண்மையை உணர்ந்தான். இறைவன் அசரீரியாக தோன்றி, மாணிக்க வாசகர் பெருமையை உணர்த்தவும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும், தாம் இவ்வாறு செய்வதாக மன்னனுக்கு உரைத்தார். மன்னனும் மாணிக்க வாசகரை இறைபணிக்கு விடுவித்து. தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்

    December 1, 2025
    ஆன்மீகம்

    ‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ – சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?

    December 1, 2025
    ஆன்மீகம்

    பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

    December 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டாக் படி, நீங்கள் புறக்கணிக்கக் கூடாத உணவுக் கோளாறுகளின் 4 நுட்பமான அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பசிபிக் கடலுக்கு அடியில் உள்ள மர்மமான கட்டமைப்புகள்: கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் கண்டறிந்தவை பூமியின் வரலாற்றை மாற்றியமைக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘Memoir Mised’: JD Vance-ன் அதிகம் விற்பனையாகும் புத்தகம், ஓஹியோ சிறைக்குள் போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்டது | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போன், கான்பூரில் சிம் வாங்கினர்
    • ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க தமிழக அரசு திட்டம்: பழனிவேல் தியாகராஜன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.