Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அப்பவே நாங்க அப்படி… மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து மதுரை தெற்கை குறிவைக்கும் பாஜக!
    மாநிலம்

    அப்பவே நாங்க அப்படி… மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து மதுரை தெற்கை குறிவைக்கும் பாஜக!

    adminBy adminSeptember 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அப்பவே நாங்க அப்படி… மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து மதுரை தெற்கை குறிவைக்கும் பாஜக!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    2024 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அதிமுக-வை மூன்றாமிடத்துக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது பாஜக. சட்டமன்றத் தொகுதிகள் வாரியான வாக்கு வித்தியாசத்திலும் ஆறுக்கு மூன்று தொகுதிகளில் அதிமுக-வை பின்னுக்குத் தள்ளியது பாஜக. அந்தத் தெம்பில் இப்போது மதுரையை வைத்து பல கணக்குகளைப் போடுகிறது பாஜக.

    மதுரை மாவட்​டத்​தில் உள்ள 10 சட்​டமன்​றத் தொகு​தி​களில் 5 தொகு​தி​களை திமுக கூட்​ட​ணி​யும் ஐந்து தொகு​தி​களை அதி​முக-​வும் தற்​போது கைவசம் வைத்​துள்​ளன. கடந்த முறை பாஜக-வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​தும் ஐந்து தொகு​தி​களை மட்​டுமே அதி​முக-​வால் வெல்ல முடிந்​தது. அது​வும் நகர்ப்​புறத்​தில் ஒரு தொகு​தி​யில் மட்​டுமே அந்​தக் கட்​சிக்கு வெற்றி கிட்​டியது.

    இம்​முறை மொத்​த​மாக 10 தொகு​தி​களை​யும் அள்​ளவேண்​டும் என இரண்டு முக்​கிய கூட்​ட​ணி​களுமே முனைப்​புக் காட்​டு​கின்​றன. இந்த நிலை​யில், மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து நின்று தாங்​கள் பெற்ற வாக்​கு​களின் அடிப்​படை​யில் மதுரை தெற்கு தொகு​தியை தங்​களுக்​காக கேட்​டுப் பெற மெனக்​கிட்டு வரும் பாஜக, இலவச இணைப்​பாக புறநகரில் மேலூர் தொகு​திக்​கும் அடி​போடு​கிறது.

    மதுரை தெற்​கில் கணிச​மான இருக்​கும் சவு​ராஷ்ட்ரா சமூகத்து மக்​களில் பெரும்​பகு​தி​யினர் பாஜக ஆதரவு மனநிலை​யில் இருப்​பவர்​கள் என்​பதே அந்​தக் கட்சி இந்​தத் தொகு​தியை குறிவைக்க முக்​கிய காரணம். மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக இரண்​டா​மிடம் பிடித்த தொகு​தி​களில் மதுரை தெற்​கும் ஒன்​று. அதனால், மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்ட பாஜக மாநில பொதுச்​செய​லா​ளர் ராம.ஸ்ரீநி​வாசனையே தெற்​குத் தொகு​திக்​காக தயார்​படுத்​துகிறது பாஜக.

    முன்​ன​தாகவே தலை​மை​யின் கண்​ணசைவு கிடைத்​திருக்​குமோ என்​ன​வோ… ராம.ஸ்ரீநி​வாசனும் தெற்கு தொகு​தியை சுற்​றிச் சுற்றி வர ஆரம்​பித்​திருக்​கி​றார். கட்சி நிகழ்ச்​சிகள், பொது நிகழ்ச்​சிகள் என நி​வாசனை மதுரை தெற்கு தொகு​திக்​குள் இப்​போது அடிக்​கடி பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து நம்​மிடம் பேசிய மதுரை பாஜக-​வினர், “மதுரை மாவட்​டத்​தில் எங்​களுக்கு சாதக​மான தொகு​தி​களில் முதன்​மை​யானது மதுரை தெற்​கு.

    அதனால் அந்​தத் தொகு​தியை மையப்​படுத்தி தேர்​தல் வேலை​களை துரிதப்​படுத்தி வரு​கி​றோம். விநாயகர் சதுர்த்​திக்​காக தெற்கு தொகு​திக்​குள் மட்​டும் 50 இடங்​களில் விநாயகர் சிலை​களை பிர​திஷ்டை செய்​தோம். அந்த 50 இடங்​களுக்​கும் ராம.ஸ்ரீநி​வாசன் போய் வந்​தார். செப்​டம்​பர் 3-ம் தேதி அவருக்கு பிறந்த நாள் வரு​கிறது. இம்​முறை தனது பிறந்த நாளை தெற்கு தொகு​திக்கு உட்​பட்ட மஹால் ஒன்​றில் நடத்த திட்​ட​மிடு​கி​றார். அதில் பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் பங்​கேற்​கி​றார்​கள்.

    மக்​கள​வைத் தேர்​தலில் மதுரை தெற்கு தொகு​தி​யில் எங்​களுக்​கும் மார்க்​சிஸ்ட் வேட்​பாளர் சு.வெங்​கடேசனுக்கு வெறும் 2,263 ஓட்​டு​கள் தான் வித்​தி​யாசம். இத்​தொகு​திக்கு உட்​பட்ட 22 வார்​டு​களில் நாங்​கள் 8 வார்​டு​களில் முதலிடம் பிடித்​தோம். இதெல்​லாமே அதி​முக எங்​களோடு இல்​லாத நிலை​யிலும் நாங்​கள் சாதித்​தது. இப்​போது அந்​தக் கட்​சி​யும் எங்​களோடு இருப்​ப​தால் இன்​னும் கூடு​தல் பலம். மக்​களின் அபி​மானத்​தைப் பெறு​வதற்​காக தெற்கு தொகு​திக்கு உட்​பட்ட பள்​ளிக்​கூடங்​களுக்கு நிதி​யளித்​தல் உள்​ளிட்ட உதவி​களைச் செய்து வரு​கி​றோம்.

    இப்​போது தெற்கு தொகுதி எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் மதி​முக-வைச் சேர்ந்த புதூர் பூமி​நாதன் இம்​முறை வடக்கு தொகு​திக்கு மாறலாம் என்​கி​றார்​கள். இந்​தத் தேர்​தலில் பூமி​நாதன் மீண்​டும் இங்கு போட்​டி​யிட்​டாலும் அல்​லது அவருக்​குப் பதிலாக திமுக-வே நேரடி​யாக களமிறங்​கி​னாலும் ராம.ஸ்ரீநி​வாசனை அத்​தனை எளி​தில் வீழ்த்த முடி​யாது. ஏனென்​றால் மக்​கள​வைத் தேர்​தலில் தனது தனிப்​பட்ட செல்​வாக்​கில் அவர் வாங்​கிக் காட்​டிய வாக்கு சதவீதம் அப்​படி” என்​ற​னர்.

    மதுரை தெற்​கில் இந்த முறை நீங்​கள் தானா என ராம.ஸ்ரீநி​வாசனிடம் கேட்​டதற்​கு, “கடந்த 10 ஆண்​டுக்​கும் மேலாக மதுரை​யில் தீவிர​மாக கட்​சிப் பணி​யாற்​றுகிறேன். எல்​லோருக்​கும் தெரிந்த முக​மாக இருப்​ப​தாலேயே மக்​கள​வைத் தேர்​தலில் இரண்​டா​மிடத்​தைப் பிடிக்க முடிந்​தது. பாஜக-​வின் சோஷியல் இன்​ஜினியரிங் வொர்க் மதுரை​யில் சிறப்​பாக உள்​ளது. அது​வும், தெற்கு தொகு​தி​யில் கூடு​தல் சிறப்​பு.

    இந்​தத் தொகு​தி​யில் அனைத்து சமு​தாய மக்​களுமே பாஜக-வுக்கு ஆதர​வாக இருப்​பதை மக்​கள​வைத் தேர்​தலிலேயே பார்த்​து​விட்​டோம். எங்​களுக்​குச் சாதக​மான இத்​தனை அம்​சங்​கள் இருப்​ப​தால் தான் தெற்​கில் போட்​டி​யிட முயற்​சிக்​கி​றோம். அறிந்த முக​மாக இருப்​ப​தால் கட்​சி​யினரும் என்னை நிறுத்த விருப்​பம் தெரிவிக்​கலாம். மதுரை தெற்கை மட்​டுமல்​லாது கூடு​தலாக இன்​னொரு தொகு​தி​யை​யும் கேட்க வேண்​டும் என்​பதும் கட்​சி​யினரின் விருப்​ப​மாக உள்​ளது. அதற்​கான முயற்​சிகளை​யும் எடு​ப்​போம்” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி

    September 3, 2025
    மாநிலம்

    நேரடி போட்டித் தேர்வின் மூலம் தேர்வான 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஐகோர்ட் உத்தரவு

    September 3, 2025
    மாநிலம்

    “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

    September 3, 2025
    மாநிலம்

    காட்டுப்பள்ளியில் போலீஸார் மீது கல் வீச்சு சம்பவம்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு

    September 3, 2025
    மாநிலம்

    பத்திரிகையாளர்களுக்கு சமூக அக்கறை மிகவும் அவசியம்: மூத்த பத்திரிகையாளர் அறிவுரை

    September 3, 2025
    மாநிலம்

    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கோரிய வழக்கு: டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி
    • அமெரிக்காவுக்கான போகஸ் சந்தை திட்டம் வேண்டும்: திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் வலியுறுத்தல்
    • தலைகீழ் வயதான நிபுணர் 7 பொதுவான உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறார், அவை எங்களை ரகசியமாக வயதாக ஆக்குகின்றன, மேலும் பழையதாக இருக்கும்
    • கானல் நீராகும் மத்திய பல்கலை. திருச்சி வளாகம் – கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
    • விக்ரமை இயக்கும் விஷ்ணு எடவன்?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.