Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை
    மாநிலம்

    கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்டம் ஐந்திணை: ஐந்​திணை- தொல்​குடி​யினர் வேளாண்மை மேலாண்​மைத் திட்டத்தின்​கீழ், கால்​நடை வளர்ப்பு மூலம் பழங்​குடி​யின விவசாயிகளின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் முன்​னோடித் திட்​டம், தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக் கழகத்​துடன் (டானு​வாஸ்) இணைந்து பழங்​குடி​யினர் நலத்​துறை​யால் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

    திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்​றும் விழுப்​புரம் மாவட்​டங்​களில் உள்ள 1,000 பழங்​குடி​யின குடும்​பங்​களை இலக்காகக் கொண்ட இத்​திட்​டம் பெண்​கள், சுய உதவிக் குழுக்​களின் திறன் மேம்​பாட்டை மைய​மாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்​ளது.

    பழங்​குடி​யின குடும்​பங்​கள் எதிர்​கொள்​ளும் கந்​து​வட்டி பிரச்​சினை​கள் இத்​திட்​டத்​தின் மூலம் தடுக்​கப்​பட்​டுள்​ளது. குடும்​பங்​கள் நேரடி​யாக வங்​கி​களு​டன் இணைக்​கப்​படு​கின்​றன. திரு​வள்​ளூரில், சுயஉதவிக் குழுப் பெண்​கள் பலர் வங்​கிக்​கடன் பெற்​று, ஆடு கொட்​டகைகள், தீவனம் கொள்​முதல் போன்ற தேவை​களை நிறைவேற்​றி​யுள்​ளனர்.

    வங்கி மூலம் ரூ.13 லட்​சம் கடன் பெற்ற 33 பெண்​கள் பழைய கடன்​களை அடைக்​க​வும் தொழில்​களில் முதலீடு செய்​ய​வும் உதவியுள்​ளனர். அறி​வியல்​ரீ​தி​யான பயிற்சி மற்​றும் கால்​நடை மருத்​துவ ஆதர​வுடன் ஆடு​கள் மற்​றும் கோழிகளின் விநி​யோகம், குடும்​பங்​களின் வரு​மானத்தை மாற்​றியமைக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

    கால்​நடை வளர்ப்​பின் மூலம் மாத வரு​வாய் ரூ.32,000 வரை கிடைக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. தினக்​கூலியை மட்​டுமே நம்பியிருந்த பெண்​கள், இப்​போது முட்​டை, ஆட்​டுக்​குட்டி மற்​றும் மதிப்பு கூட்​டப்​பட்ட பொருட்​களை விற்​ப​தன் மூலம் நிலை​யான வரு​மானத்தை ஈட்​டு​கின்​றனர். ஆடு வளர்க்​கும் குடும்​பங்​கள், கோழிப்​பண்ணை வைத்​திருப்​போர் நிலை​யான வரு​மானத்தை ஈட்டி வரு​கின்​றனர்.

    கால்​நடை விநி​யோகத்​துடன், அவற்​றின் பராமரிப்​பு, நோய்த் தடுப்பு மற்​றும் இனப்​பெருக்க முறை​கள் குறித்த பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன. தொடர்ச்​சி​யான பயிற்சி மற்​றும் மேம்​பாடு மூலம் கால்​நடை வளர்ப்பை ஒரு லாபகர​மான தொழிலாக பயன்​பெற்ற குடும்​பங்​கள் கருதுகின்​றன.

    ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத்​துறை​யின் செய​லா​ளர் கூறும்​போது, “நிலமற்ற பழங்​குடி​யினருக்​கும், விளிம்​பு நிலை சமூகத்​தினருக்​கும் பொருளா​தார நிலையை மேம்​படுத்த இந்​தத் திட்​டம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்​கு​கிறது. பெண்​களுக்கு முன்​னுரிமை அளிப்​ப​தன் மூலம், குடும்​பங்​களுக்கு சமூகப் பாது​காப்பு கிடைப்​பதை இந்​தத்​ திட்​டம்​ உறு​தி செய்​கிறது” என்​றார்​.

    துர்கா (பொன்​னேரி) – எனக்கு மூன்று பெண் ஆடு​களும், ஒரு ஆண் ஆடும் வழங்​கப்​பட்​டன. இப்​போது அந்த ஆடு​கள் இரண்டு குட்​டிகளை ஈன்​றுள்​ளன. ஒரு காலத்​தில் வாழ்​வா​தா​ரத்​திற்கு வழி தெரி​யாமல் வீட்​டில் முடங்​கிக் கிடந்த எனக்​கு, இந்த திட்​டம் ஒரு புதிய நம்​பிக்​கை​யைக் கொடுத்​திருக்​கிறது. எங்​கள் வாழ்க்​கையை மேம்​படுத்​தும் இந்​தத் திட்​டத்​துக்​காக முதல்​வர், அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்கு என் நன்​றி. வருங்​காலத்​தில் ஒரு பெரிய பண்ணை அமைப்​பதே எனது லட்​சி​யம்.

    முரு​கம்​மாள் (பழ​வேற்​காடு) – ஆடு மற்​றும் கோழிகளை வளர்த்து கணிச​மான வரு​வாய் ஈட்டி வரு​கிறேன். என் கணவருக்கு வேலை இல்​லாத நேரங்​களில் வறுமை​யின் பிடி​யில் சிக்​கித் தவித்​தோம். இந்த திட்​டம் மூலம் கால்​நடை வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்​றேன். 50 நாட்​டுக் கோழிகளை வளர்த்​து, மாதம் கணிச​மான வரு​மானம் ஈட்​டத் தொடங்​கினேன். ஒரு கோழி ரூ.500 வரை விற்பனையாகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப் பண்ணை அலுவலகங்களில் வருமான வரி சோதனை

    September 24, 2025
    மாநிலம்

    போட்டியிட்டே ரெண்டு மாமாங்கமாச்சு… தேனியில் தேய்ந்து வரும் காங்கிரஸ்!

    September 24, 2025
    மாநிலம்

    டிடிவி தினகரன் வீட்டில் அண்ணாமலை ஆலோசனை – நடந்தது என்ன?

    September 24, 2025
    மாநிலம்

    அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உயர் படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்திய இளைஞரை உக்ரைன் போருக்கு அனுப்பிய ராணுவம்
    • ஹாங்காங் சூப்பர் சிக்ஸ்: தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம்
    • 2 காலகட்டங்களில் நடக்கும் ‘மெல்லிசை’
    • நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல்
    • இண்டியா கூட்டணியில் அழைப்பு இல்லை: ஒவைசி தனித்து போட்​டி​

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.