Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்
    மாநிலம்

    கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய இலங்கை அதிபரின் பேச்சு இருநாட்டு உறவுக்கு எதிரானது இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து “கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என கூறியுள்ளார்.

    அநுர குமார திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது. மாறாக இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது.

    கடந்த 1974 ஜூன் 26 ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி – இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயகா ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தம் இன்றும் சட்டபூர்வ ஒப்புதலைப் பெறவில்லை என்பதை இலங்கை அதிபர் கருத்தில் கொள்ள வேண்டும்.

    கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்த முயற்சிகளுக்கு ஆரம்ப நிலையிலே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, கடல் எல்லையை பிரித்துக் கொள்வது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிராக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டு, கச்சதீவு மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

    தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்பதை அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம் உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரும், கடல் கொள்ளையர்களும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    அண்மைக்காலமாக தாக்குதல் நடத்துவதுடன் தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்கள் வசமிருக்கும் மீன்கள், வலைகள், படகுகள் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்து, இலங்கை அரசு உரிமை கொண்டாடுவதும் அதிகரித்து வருகிறது.

    கடந்த மாதம் 7 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, வெளிச்சுரா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த நீதிமன்றம் 10 மீனவர்களுக்கும் தலா ரூ 5 கோடி அபராதமும், கட்டத்தவறினால் 18 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, வெளிக் கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க “இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், அவர்களை எளிதாக விட மாட்டோம். பிடிபடும் படகுகளை திருப்பித் தர மாட்டோம். அது இலங்கைக்கே சொந்தமாகும்“ என்று கூறியிருப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.

    இலங்கை அதிபரின் கச்சத்தீவுப் பயணம், கச்சத்தீவு மற்றும், தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை சேதாரம் இல்லாமல் திருப்பி வழங்கவும், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமை நிலை நாட்டப்படவும் ஒன்றிய அரசு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து

    September 3, 2025
    மாநிலம்

    “ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது!” – ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    September 3, 2025
    மாநிலம்

    “பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு

    September 3, 2025
    மாநிலம்

    கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    September 2, 2025
    மாநிலம்

    ‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்

    September 2, 2025
    மாநிலம்

    “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்…” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வன்முறைக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூருக்கு பிரதமர் மோடி செப்.13-ல் பயணம்?
    • பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3,819 கோடிக்கு 23 ஒப்பந்தங்கள் கையெழுத்து
    • ஐஸ்லாந்தில் மட்டுமே நீங்கள் காணும் 6 தனித்துவமான விஷயங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்! – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது!” – ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.