Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முற்றுகிறதா எடப்பாடியுடனான மோதல்? – செப்.5-ல் மனம் திறக்கப் போவதாக செங்கோட்டையன் தகவல்
    மாநிலம்

    முற்றுகிறதா எடப்பாடியுடனான மோதல்? – செப்.5-ல் மனம் திறக்கப் போவதாக செங்கோட்டையன் தகவல்

    adminBy adminSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முற்றுகிறதா எடப்பாடியுடனான மோதல்? – செப்.5-ல் மனம் திறக்கப் போவதாக செங்கோட்டையன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஈரோடு: செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றியதற்காக இபிஎஸ்-க்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்னூரில் நடந்த அந்தப் பாராட்டு விழாவில், மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார் செங்கோட்டையன்.

    அதன் பின்னர் பல்வேறு தருணங்களிலும் அவர் இபிஎஸ் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பேரணியை இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். அவர் இதற்காக கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். ஆனால், கோபி எல்லையில் இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வரவேற்பு அளிக்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரை ஒரு மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் இவ்வாறாக புறக்கணித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், வெள்ளக்கோயிலில் ஒரு திருமண நிகழ்வில் செங்கோட்டையன் நேற்று பங்கேற்றார். அப்போது கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசித்ததாக தகவல். தொடர்ந்து இன்றும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து, மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

    கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமா? என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளது என்று மட்டும் தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்கிறதா? என்ற கேள்விக்கு சிரித்து முகத்துடன் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார். அவரின் அறிவிப்பும், சூசக சிரிப்பும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    September 2, 2025
    மாநிலம்

    ‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்

    September 2, 2025
    மாநிலம்

    “எங்கு பத்திரப் பதிவு நடந்தாலும் அமைச்சருக்கு 10% கமிஷன்…” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் செப்.6 வரை வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    September 2, 2025
    மாநிலம்

    மதுரையில் மக்கள் சந்திப்பில் மேயர், கவுன்சிலர்களை தவிர்த்த அமைச்சர் பிடிஆர் – பின்னணி என்ன?

    September 2, 2025
    மாநிலம்

    “மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம்

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் வாக்காளர் பட்டியல் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • ஆப்டிகல் மாயை: உங்கள் கவனத்தை சோதிக்கவும்! இந்த படத்தில் 33 மற்றும் 35 ஐக் கண்டறியவும், நேரம் முடிவதற்குள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘டெட்’ விவகாரம்: 1.5 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்சிகள் வலியுறுத்தல்
    • உயர் இரத்த அழுத்தத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான ஆழமான இணைப்பு கண்டறியப்பட்டுள்ளது: ஆபத்தை குறைக்கக்கூடிய 3 விஷயங்கள் – இந்தியாவின் காலங்கள்
    • எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை: தேஜா சஜ்ஜா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.