Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு
    மாநிலம்

    ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதிக எண்​ணிக்​கை​யில் நடத்த வேண்​டும் என்று தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக உயர் அதி​காரி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

    இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழகத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் திட்​டங்​களின் செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம், சென்னை நந்​தனத்​தில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று நடந்​தது.

    இதில் ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் செயல்​படுத்​தப்​படும் முன்​னெடுப்​பு​களான கல்​லூரிக் கனவு திட்​டம், பொறி​யியல், கலை மற்​றும் அறி​வியல், பாலிடெக்​னிக், தொழிற்​ப​யிற்சி நிலை​யங்​களில் திறன் பயிற்சி வழங்​குதல், ஸ்க​வுட் திட்​டம், தமிழ்​நாடு திறன் போட்​டிகள், நிரல் திரு​விழா (Hackathon), தமிழ்​நாடு மாநில அளவிளான வேலை​வாய்ப்பு திட்​டம் (TNSLPP), உயர்​வுக்​குப்​படி திட்​டம், நான் முதல்​வன் போட்​டித் தேர்​வு​கள் (குடிமைப்​பணித் தேர்​வு, ஊக்​கத் தொகை திட்​டம் மற்​றும் எஸ்​எஸ்​சி, வங்கி பணி​யாளர் தேர்வு வாரிய போட்​டித் தேர்​வு​களுக்​கான உறை​விடப் பயிற்​சி ஆகிய​வற்​றின் தற்​போதைய முன்​னேற்​றம் குறித்து துணை முதல்​வர் விரி​வாக ஆய்வு மேற்​கொண்​டார்.

    ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின்​கீழ் சிறப்​பாக செயல்​படும் கல்​லூரி​களை தேர்ந்​தெடுத்து ஊக்​குவிக்க வேண்​டும். 2026-ல் சீனா​வின் ஷாங்​காய் நகரில் நடை​பெறும் சர்​வ​தேச திறன் போட்​டிகளில் பங்கு பெறு​வதற்​கான தமிழக மாணவர்​களின் எண்​ணிக்​கையை உயர்த்த தேவை​யான உயர்தர தொழில்​நுட்ப பயிற்​சியை வழங்க வேண்​டும். நிரல் திரு​விழா 2.0 மூலம் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாணவர்​களை தொழில் முனை​வோராக உரு​வாக்க வேண்​டும்.

    ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் மூலம் நடை​பெறும் வேலை​வாய்ப்பு முகாம்​களை அதி​கப்​படுத்தி அதிக எண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் வேலை​வாய்ப்​பைப் பெற நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இத்​திட்​டத்​தின் போட்​டித் தேர்​வு​கள் பிரி​வின்​கீழ் அரசுப் பணி​களில் பணி​வாய்ப்பு பெறு​பவர்​களின் தேர்ச்சி எண்​ணிக்​கையை அதி​கப்​படுத்த இலக்கு நிர்​ண​யித்து செயல்பட வேண்​டும்.

    விளை​யாட்​டுத் துறை​யில் சிறந்து விளங்​கிய​வர்​கள் அவர்​கள் விரும்​பும் வேலை​வாய்ப்பை பெறும் வகை​யில் திறன் பயிற்​சிகளை வழங்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என அலு​வலர்​களுக்கு பல்​வேறு அறி​வுரைகளை துணை முதல்​வர் வழங்​கி​னார். இந்த ஆய்​வுக் கூட்​டத்​தில் சிறப்​புத்​திட்ட செய​லாக்​கத் ​துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக் கழக மேலாண் இயக்​குநர் கிராந்தி குமார் பாடி மற்​றும் உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம்

    September 2, 2025
    மாநிலம்

    ‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    September 2, 2025
    மாநிலம்

    பாஸ்போர்ட் பெற தரகர்களை அணுக வேண்டாம்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

    September 2, 2025
    மாநிலம்

    காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதி இல்லையா? – திமுக அரசுக்கு பாஜக கேள்வி

    September 2, 2025
    மாநிலம்

    கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை

    September 2, 2025
    மாநிலம்

    தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீபாவளிக்கு வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’
    • “மோடியை வரலாறு மன்னிக்காது” – திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி ஆவேசம்
    • கே-டிராமா நட்சத்திரத்தைப் போல 10 முறை மருனல் தாக்கூர் உடையணிந்தார்
    • கருத்துவேறுபாடு கொண்ட 2 நண்பர்களின் கதை ‘பாம்’
    • ‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.