Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
    மாநிலம்

    கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘கல்வி நிதி வழங்​கு​வ​தில் அரசி​யல் செய்ய வேண்​டாம்’ என்று மத்​திய அரசுக்கு தமிழக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்பில் மகேஸ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களின் உயர் கல்விக்கு வழி​காட்​டும் வகையில் ‘கல்​லூரி களப்​பயணம்’ என்ற சிறப்பு திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இத்​திட்​டத்​தின்​கீழ் 12-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்​கள் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​லூரி​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு கல்​லூரி​களைப் பார்வையிடுகின்றனர்.

    அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்​டுக்​கான ‘கல்​லூரி களப்​பயணம்’ திட்​டத்​தின் தொடக்க விழா சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் நேற்று நடந்​தது. இதில் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ், பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் சந்​திரமோகன், தமிழ்​நாடு திறன் மேம்​பாட்​டுக்​கழக மேலாண் இயக்​குநர் கிராந்தி குமார், அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் ஜெ.பிர​காஷ், கிண்டி பொறி​யியல் கல்​லூரி டீன் பி.ஹரி​கரன், பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் கூறிய​தாவது: அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு உயர்​கல்விக்கு வழிகாட்டும் நோக்​கில் ‘கல்​லூரி களப்​பயணம்’ திட்​டம் கொண்​டு​வரப்​பட்​டது. இதன்​மூலம் வெவ்​வேறு கல்​லூரி​களுக்கு அழைத்​துச்​செல்​லப்​படும் மாணவர்​கள் அங்​குள்ள படிப்​பு​கள், வசதி​கள், ஆய்​வகங்​கள் போன்​றவற்றை அறிந்​து​கொள்​வ​தால் அவர்​களுக்கு உயர்​கல்​வி​யில் சேர வேண்​டும் என்ற சிந்​தனை மனதில் உரு​வாகும். இந்த ஆண்டு ஒரு லட்​சத்து 40 ஆயிரம் மாணவர்​கள் கலந்​து​கொள்​கின்​றனர். அவர்​கள் 822 கல்​லூரி​களுக்கு களப்​பயணம் மேற்​கொள்​கின்​றனர்.

    ஒவ்​வொரு ஆண்​டும் கல்​லூரி களப்​பயணத்தை ஆய்​வு செய்​த​போது இதில் பங்​கேற்​கும் மாணவர்​களில் 70 சதவீதம் பேர் உயர்​கல்விக்கு செல்​வதைக் கண்​டறிந்​தோம். இது 100 சதவீதத்தை எட்ட வேண்​டும் என்​பது​தான் எங்​களின் இலக்​கு. அரசுப் பள்​ளி​களில் இந்த ஆண்டு புதி​தாக 4 லட்​சம் மாணவர்​கள் சேர்ந்​துள்​ளனர்.

    ஒரு அரசு பள்​ளி​யில் வெறும் 4 குழந்​தைகள் படித்​தால்​கூட அந்​தப் பள்ளி தொடர்ந்து இயங்​கும். அரசு லாபநோக்கு பார்ப்​பது கிடை​யாது. கல்வி என்​பது ஒரு சேவை என்று கருதுகிறோம். ஆனால், தனி​யார் பள்​ளி​கள் அப்​படி அல்ல. அவர்​கள் லாபநோக்கு பார்த்​து​தான் பள்​ளி​களை நடத்​து​வார்​கள்.

    கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தில், தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத மாணவர் சேர்க்​கைக்​கான கல்வி நிதியை மத்​திய அரசு விடுவிக்​க​வில்​லை. இத்​திட்​டத்​தில் ஆண்​டு​தோறும் ஒரு லட்​சம் மாணவர்​கள் பயன்​பெறுகின்​றனர். கல்வி நிதி வழங்​கு​வ​தில் மத்​திய அரசு அரசி​யல் செய்​யக்​கூ​டாது என்​பதை தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். இத்​திட்​டத்​தில் ரூ.600 கோடி நிதி வரவேண்​டி​யுள்​ளது. டெல்​லி​யில் மத்​திய கல்வி அமைச்​சரை இரண்டு மூன்று முறை சந்​தித்​துப் பேசி​யுள்​ளோம்.

    இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளோம். விரை​வில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்​பார்க்​கிறோம். நிதி ஒதுக்​கீடு என்​பது நமது உரிமை. தமிழகத்​துக்​கான கல்வி நிதியை மத்​திய அரசு உடனடி​யாக விடுவிக்​கக் கோரி காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில் தொடர் உண்​ணா​விரதம் இருந்து வரு​கிறார். மத்​திய அரசு இப்​போ​தாவது மனமிரங்கி தமிழகத்​துக்​கான கல்​வியை நிதியை விடுவிக்​க முன்​வரவேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

    September 2, 2025
    மாநிலம்

    மக்களுக்கு பாகுபாடு இல்லாமல் பொது வளங்கள் கிடைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் விருப்பம்

    September 2, 2025
    மாநிலம்

    தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

    September 2, 2025
    மாநிலம்

    ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்: உதயநிதி உத்தரவு

    September 2, 2025
    மாநிலம்

    174 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கம்

    September 2, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரி விதிப்பை சமாளிக்க உதவி திட்டம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 18 வயதில் ஹரியாணாவுக்கு ஆடவில்லை எனில் அமெரிக்கா சென்றிருப்பேன் – ஹர்ஷல் படேல்
    • நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் டிஜி தியாகராஜன்
    • சமூக முன்னேற்றத்துக்கு பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு விருது: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
    • ஆசி​யா​வில் பணி செய்ய சிறந்த இடம்: 48 நிறுவனங்களுடன் இந்​தியா முதலிடம்
    • உங்கள் உடலுக்கு வோக்கோசு தேநீரின் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தி, இதயம், தோல் மற்றும் பலவற்றை மேம்படுத்துதல் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.