Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
    மாநிலம்

    ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க முதல்​வர் ஸ்டா​லின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

    அமெரிக்க அரசு உயர்த்​தி​யுள்ள இறக்​குமதி வரி​யால் பாதிப்​படைந்​துள்ள திருப்​பூர் பின்​னலாடைத் தொழிலைப் பாது​காக்க நடவடிக்கை எடுங்​கள் என்று பிரதமரை, தமிழக முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்​றது முதல் தற்​போது வரை ஜவுளி மற்​றும் பின்​னலாடைத் தொழில்​களுக்கு தமிழக அரசு ஏற்​படுத்​திய இடையூறுகள், பிரச்​சினை​கள் ஏராளம். அதனால், அந்​தத் தொழில்​கள் ஏற்​கெனவே நலிவடைந்​துள்​ளது என்​பதே உண்​மை.

    நான்கு முறை வெளி​நாட்டு சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டும், கோவை மற்​றும் திருப்​பூர் மாவட்​டங்​களில் இயங்​கும் ஜவுளித் தொழிலுக்கு எந்த வெளி​நாட்டு முதலீடு​களை​யும் ஈர்க்​க​வில்​லை. உள்​நாட்டு முதலீடு​களும் மத்​திய பிரதேசம் போன்ற மாநிலங்​களுக்கு செல்​கின்​றன.

    கழி​வுப் பஞ்​சில் இருந்து தயாரிக்​கப்​படும் நூலிழைகளைப் பயன்​படுத்தி காடா துணி, கலர் நூல்​களில் போர்​வை, மெத்தை விரிப்பு போன்​றவற்றை உற்​பத்தி செய்யும் ஓபன் எண்ட் ஸ்பின்​னிங் மில்​கள், உற்​பத்தி நிறுத்​தப் போராட்​டங்​களை நடத்​தின. இவர்​களின் கோரிக்​கைகளை இந்த அரசு கண்​டு​கொள்​ளவே இல்​லை.

    திமுக ஆட்​சி​யில் தமிழகம் பாழடைந்​ததை மறைக்க, எதற்​கெடுத்​தா​லும் மத்​திய அரசின் மீது ஸ்டா​லின் பழி​போடு​கிறார். அமெரிக்​கா​வின் தற்​போதைய கூடு​தல் வரி விதிப்​பால், நம் நாட்​டில் பின்​னலாடை மற்​றும் ஆயத்த ஆடைகள் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு எந்த இடையூறும் ஏற்​ப​டாத வகை​யில், மற்ற நாடு​களுக்கு ஏற்​றும​தியை ஊக்​குவிக்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று பிரதமருக்​கு, அதி​முக சார்​பில் நான் கடிதம் எழு​தி​யுள்​ளேன்.

    அதில், உள்​ளூர் உற்​பத்​தி​யாளர்​களுக்கு உடனடி நிவாரண நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வலி​யுறுத்​தி​யும், தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்​க​வும், கடன் மற்​றும் வட்​டியை 6 மாதங்​களுக்கு நிறுத்​திவைக்​க​வும், வட்​டியை தள்​ளு​படி செய்​ய​வும் நடவடிக்கை எடுத்​து, தொழிலா​ளர்​கள் வேலை​யிழப்​பைத் தடுக்க நடவடிக்கை எடுக்​கு​மாறு கேட்​டுக்​கொண்​டுள்​ளேன்.

    அமெரிக்​கா​வில் இந்​தி​யப் பொருட்​களை இறக்​குமதி செய்​பவர்​கள், கூடு​தல் வரி செலுத்த வேண்​டும். இதனால் இந்​திய பின்​னலாடை அமெரிக்க சந்​தை​யில், பிற​நாட்டு ஜவுளிப் பொருட்​களு​டன் போட்​டி​யிட முடி​யாமல் விற்​

    பனை குறை​யும். எனினும், தமிழகத்​தில் பின்​னலாடை மற்​றும் ஆயத்த ஆடை தங்கு தடை​யின்றி உற்​பத்தி செய்​தால்​தான், பிற நாடு​களுக்​கும் ஏற்​றுமதி செய்ய முடி​யும். நமது நாட்​டுக்​கும் அந்​நியச் செலா​வணி கிடைக்​கும்.

    ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க தமிழக அரசு உடனடி​யாக ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசுப் பணி தேர்வுக்கு கேள்வி தயாரிப்பில் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்

    September 2, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறைபாடு: நீதிமன்றம்

    September 2, 2025
    மாநிலம்

    குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

    September 2, 2025
    மாநிலம்

    கல்வி நிதி வழங்குவதில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 3 ஜெர்மனி நிறுவனங்கள் ரூ.3,201 கோடி முதலீடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    September 2, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் செப்.7 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அரசுப் பணி தேர்வுக்கு கேள்வி தயாரிப்பில் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்
    • மடப்புரம் அஜித்குமார் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறைபாடு: நீதிமன்றம்
    • நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்குப் பிறகு குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க மருத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த உணவுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா ஒருமுறை அவளைக் கொண்டாடினார், பின்னர் அவளை நீக்கிவிட்டார், பின்னர் அவரது கதையை அழிக்க முயன்றார்: ரோஸ் ஃபெரீராவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசு கல்லூரிகளில் 560 கவுரவ விரிவுரையாளர்கள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.