Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!

    adminBy adminAugust 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு உணவு வழங்கவுள்ளார்.

    இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ‘ குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு வழங்குவார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், பிணைப்புகளை வளர்ப்பதிலும் இத்தகைய தொடர்புகள் எப்போதும் பலனளித்துள்ளன.

    எங்கள் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அனைத்து தேஜகூ கூட்டாளிகளின் முழு ஆதரவையும் பெற்றுள்ளார் என்ற போதிலும், வாக்களிப்பின் போது எம்.பி.க்களிடையே முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்த இந்த இரவு உணவு உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளன.

    பலம் என்ன? – செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெற​விருக்​கும் குடியரசு துணைத் தலைவர் தேர்​தலுக்​காக நாடாளு​மன்றம் சார்​பில் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதன்​படி, குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் மொத்​தம் 782 எம்​பிக்​கள் வாக்​களிக்​கத் தகு​தி​யுடைய​வர்​கள். அவர்​களில் 542 பேர் மக்களவை​யிலும், 240 மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர்.

    தேர்​தலில் வெற்றி பெற 392 எம்​பிக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. மக்​களவை​யில் மத்​திய அரசுக்கு ஆதர​வாக 293 எம்பிக்களும், 134 எம்​பிக்​கள் மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர். இவை மொத்​தம் சேர்த்து மத்​திய அரசிற்கு 427 எம்​பிக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 249 பேர் மக்​களவை​யிலும், 106 பேர் மாநிலங்​களவை​யிலும் என மொத்​தம் 355 பேர் உள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    September 3, 2025
    தேசியம்

    ​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி

    September 3, 2025
    தேசியம்

    பிஹார் பேரணியில் ‘பைக்’ இழந்தவருக்கு புதிய ‘பல்சர்’ பரிசளித்த ராகுல் காந்தி

    September 3, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் சபரி ஆற்றில் தத்தளித்தவரை பத்திரமாக மீட்ட விமானப்படை ஹெலிகாப்டர்

    September 3, 2025
    தேசியம்

    தந்தை கேசிஆர் கட்சிக்கு எதிராக ‘கலகம்’ – கவிதாவின் அரசியல் எதிர்காலம் என்ன?

    September 3, 2025
    தேசியம்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
    • “இந்த அவல ஆட்சி இருந்து என்ன பயன்?” – மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
    • வேலையில் பொறாமை கொண்ட சகாக்களை எவ்வாறு கையாள்வது: அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்க 5 பயனுள்ள வழிகள்
    • 12 வயது சோபியா ஃபோர்ச்சாஸ் யார்? கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார், மினியாபோலிஸ் சர்ச் ஷூட்டிங்கில் அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி அகற்றப்பட்டது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.