Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு உ.பி. முதல்வர் கண்டனம்
    தேசியம்

    அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு உ.பி. முதல்வர் கண்டனம்

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு உ.பி. முதல்வர் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவுவது மேற்கு வங்க அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மஹுவா மொய்த்ரா பேசும் போது, “இந்திய எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப். உள்ளிட்ட ஐந்து படைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அதற்கு முழு பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான். அப்படியிருக்க மேற்கு வங்க அரசை எப்படி பா.ஜ.கவினர் குறை கூற முடியும்?

    இந்தியாவின் எல்லைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், ஊடுருவல்காரர்கள் நூற்றுக் கணக்கில் நுழைந்தால், நம் பெண்களை அவமதித்தால், நம் நிலங்களை அபகரித்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேஜையில் வைக்க வேண்டும்” என்றார்.

    மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசியுள்ள கருத்துகள் பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து, திரிணமூல் காங் கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசிய பேச்சுகள் மன்னிக்க முடியாதவை. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை மன்னிப்புக் கேட்கவேண்டும். அவரது பேச்சை நான் கண்டிக்கிறேன்.

    மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடிய அமைச்சர் குறித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் ஆட் சேபனைக்குரியதாக உள்ளன.

    திரிணமூல் காங்கிரஸின் அரசியல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் இந்தக் கருத்து, ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் அவமதிப்பதாகும். இந்த அநாகரீகமான கருத்துக்காக திரிணமூல் காங்கிரஸ் தலைமை இந்த நாட்டிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து

    September 4, 2025
    தேசியம்

    திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுகவினர் காலில் விழவைத்த நிகழ்வு: அன்புமணி கண்டனம்

    September 4, 2025
    தேசியம்

    விசாகப்பட்டினத்தில் 55 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறப்பு

    September 4, 2025
    தேசியம்

    அனைத்து நக்சல்களும் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

    September 4, 2025
    தேசியம்

    தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு

    September 4, 2025
    தேசியம்

    வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் மீது நடவடிக்கை: சைபர் க்ரைம் போலீஸூக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • ஜமுன்களை சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்: உடல்நல அபாயங்களை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இப்படியே சென்றால் காடுகளே இருக்காது’ – மரம் வெட்டுதலை கண்டித்து உச்ச நீதிமன்றம் கருத்து
    • செட்டிநாடு விமான நிலையம் சாத்தியமில்லை என கைவிட்ட தமிழக அரசு – காரைக்குடி மக்கள் அதிருப்தி
    • இந்திய சமையலறைகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்: ஆலிவ், சூரியகாந்தி, கடுகு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.