Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
    மாநிலம்

    ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

    adminBy adminAugust 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளம்பெண்ணின் உடலுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கொல்லங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மதியம் சந்தியா கமுதிக்கு செல்வதற்காக பேரையூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து அவ்வழியாக சென்ற உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். வாகனத்தில் ஏறிய சில நிமிடங்களில் சந்தியா வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளார்.

    பின்னர் அவரை ஆம்பலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்குப் பின், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அன்றிரவே அவர் மூளைச்சாவு அடைந்ததாக அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அதனையடுத்து, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர் இன்று காலை மூளைச் சாவடைந்த சந்தியாவின் இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு இரண்டு ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சந்தியாவின் உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதா ராணி, பேரையூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் சந்தியாவின் உடலுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதராணி கூறியது: “கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய சந்தியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது மூளை செயல்படுகிறதா என நடைபெற்ற பரிசோதனையில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரியவந்தது. அதன்பின் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் சந்தியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

    அதன்பின் அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் பட்டியலின்படி பயனாளிகளுக்கு வழங்க இரண்டு கண்கள், இரண்டு கிட்னிகள், இதயம், கல்லீரல் இன்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சந்தியாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

    September 1, 2025
    மாநிலம்

    மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி கூறிவிட்டு முதுகில் குத்திவிட்டார் பழனிசாமி: பிரேமலதா குற்றச்சாட்டு

    September 1, 2025
    மாநிலம்

    மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    September 1, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 1, 2025
    மாநிலம்

    “தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது” – அன்புமணி

    September 1, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
    • யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
    • ஆப்டிகல் மாயை: 6 கள் கடலில் மறைக்கப்பட்ட எண் 9 ஐ வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல்
    • மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி கூறிவிட்டு முதுகில் குத்திவிட்டார் பழனிசாமி: பிரேமலதா குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.