Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம்: அன்புமணி விமர்சனம்
    மாநிலம்

    ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம்: அன்புமணி விமர்சனம்

    adminBy adminAugust 31, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்வது சுற்றுலா பயணம்: அன்புமணி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதா? பச்சைப்பொய் ஒன்றுதான் திமுகவின் முதலீடு” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவதை விட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

    தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை. திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை என்பதை கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.

    முதல்வர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20-ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றும் திமுக அரசு அறிவித்தது.

    ஆனால், ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களின் பெயர்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கூட திமுக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவரங்களை திமுக அரசு ரகசியமாக வைத்திருப்பதில் இருந்தே உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

    80% முதலீடு வந்து விட்டது, 100% முதலீடு வந்து விட்டது என நாளொரு பொய்யையும், பொழுதொரு கதையையும் திமுக அரசு கூறிவரும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை விளக்க சில புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடு செய்ய முன்வந்த 10 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் தமிழக அரசு வெளியிட்டது.

    அவற்றில் டாட்டா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.3800 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது. அதுவும் கூட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் 04.07.2022ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது ஆகும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.70,000 கோடியில் ஒரு ரூபாய் முதலீடு கூட வரவில்லை.

    அதேபோல், அதானி குழுமம் உறுதியளித்த ரூ.42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ உறுதியளித்த ரூ.12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த ரூ.6180 கோடி ஆகியவ்ற்றிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லை. வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.4000 கோடி மதிப்பில் தான் தூத்துக்குடி மகிழுந்து ஆலையை அமைத்திருக்கிறது.

    சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் பசுமை அமோனியா ஆலைக்கு அண்மையில் தான் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நிறுவனங்கள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிட மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது.

    திமுக அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த நிலையில் உள்ள நிலையில், அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் திமுக அரசு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.

    திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித்தான் பொய்யுரைத்து வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார்; அடுத்த நிகழ்ச்சியில் 90% என்று கூறுவார்; இப்போது 98% என்று கூறி வருகிறார். அதேபோல் தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77%, 80%, 100% என்று முதல்வரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும் தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகு விரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

    September 1, 2025
    மாநிலம்

    மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி கூறிவிட்டு முதுகில் குத்திவிட்டார் பழனிசாமி: பிரேமலதா குற்றச்சாட்டு

    September 1, 2025
    மாநிலம்

    மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    September 1, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 1, 2025
    மாநிலம்

    “தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது” – அன்புமணி

    September 1, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
    • ஆப்டிகல் மாயை: 6 கள் கடலில் மறைக்கப்பட்ட எண் 9 ஐ வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல்
    • மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி கூறிவிட்டு முதுகில் குத்திவிட்டார் பழனிசாமி: பிரேமலதா குற்றச்சாட்டு
    • ராஜஸ்தானின் பண்டைய கோட்டைகள்: கிங்ஸ் மற்றும் ராணிகளின் நிலத்தின் குறுக்கே ஒரு சித்திர பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.