Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உதயநிதியே சொல்லியும் உள்ளே சேர்க்காமல் இருக்கிறாரா? – ராஜேஸ்குமார் எம்பிக்கு எதிராக ரவுண்டு கட்டும் சர்ச்சை!
    மாநிலம்

    உதயநிதியே சொல்லியும் உள்ளே சேர்க்காமல் இருக்கிறாரா? – ராஜேஸ்குமார் எம்பிக்கு எதிராக ரவுண்டு கட்டும் சர்ச்சை!

    adminBy adminAugust 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உதயநிதியே சொல்லியும் உள்ளே சேர்க்காமல் இருக்கிறாரா? – ராஜேஸ்குமார் எம்பிக்கு எதிராக ரவுண்டு கட்டும் சர்ச்சை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழக மக்களை திமுக-வுக்கு ஆதரவாக திரட்டுவதைக் காட்டிலும் திமுக-வினரை ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக உட்காரவைப்பதே திமுக தலைமைக்கு பெரிய தலைவலியாக இருக்கும் போலிருக்கிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக-விலும் தலைமைக்கு அப்படியொரு தலைவலி தான்!

    நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜேஸ்​குமார் எம்பி-க்கும் முன்னாள் மாவட்டச் செயலா​ளரும் முன்னாள் மத்திய இணையமைச்​சருமான காந்திச்​செல்​வனுக்கும் அவ்வளவாய் ஒத்துப்​போவ​தில்லை. இவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், அண்மையில் ராஜேஸ்​கு​மாரிடம் காந்திச் செல்வனை அரவணைத்துச் செல்லும்படி சொன்ன​தாக​வும், ஆனால், அதன் பிறகும் அவர் அலட்டிக்​கொள்​ள​வில்லை என்றும் நாமக்கல் திமுக வட்டாரத்தில் சொல்கி​றார்கள்.

    இது தொடர்பாக அண்மையில் நாமக்கல் வந்த உதயநிதியை தனது ஆதரவாளர்கள் புடைசூழ சென்று சந்தித்த காந்திச்​செல்வன், தனது ஆதங்கத்தை அவரிடம் கொட்டித் தீர்த்​த​தாகவும் சொல்கி​றார்கள்.

    ஒருங்​கிணைந்த நாமக்கல் மாவட்டச் செயலாளராக 15 ஆண்டு​களுக்கும் மேலாக இருந்தவர் காந்திச்​செல்வன். 10 ஆண்டு​களுக்கு முன்பு மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்​கப்பட்ட போது கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்​கப்​பட்டார் காந்திச்​செல்வன். அதன் பிறகு தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்​தியின் காரணமாக காந்திச்​செல்வனை எடுத்​து​விட்டு அவரது விசுவாசியான பார்.இளங்​கோவனை மாவட்டச் செயலா​ள​ராக்​கி​னார்கள்.

    அவரும் ஓராண்டு கூட நீடிக்​க​வில்லை. மீண்டும் காந்திச்​செல்வனே கிழக்கு மாவட்டப் பொறுப்​பாள​ரா​னார். மீண்டும் என்ன நடந்ததோ தெரிய​வில்லை காந்திச்​செல்வனை நீக்கி​விட்டு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த கே.ஆர்​.என்​.​ராஜேஸ்​குமாரை மாவட்டச் செயலா​ள​ராக்​கி​னார்கள். அதனைத் தொடர்ந்து, இரண்டு முறை ராஜ்யச​பாவுக்கும் அனுப்​பப்​பட்டார் ராஜேஸ்​கு​மார்.

    இதனால் ஏற்பட்ட வருத்​தத்தில் காந்திச்​செல்வன் கட்சி நடவடிக்​கைகளை விட்டு ஒதுங்​கி​னார். இந்தச் சூழலில் தான் அவரை மீண்டும் ஆக்டீவ் அரசியலுக்குள் கொண்டுவர நினைத்த உதயநிதி, அவரை அரவணைத்துச் செல்லும்படி ராஜேஸ்​கு​மாருக்கு அட்வைஸ் செய்த​தாகச் சொல்கி​றார்கள். ஆனால், ஒன்றுக்கு மூன்று முறை அவர் அழுத்திச் சொல்லியும் ராஜேஸ்​குமார் அலட்டிக்​கொள்​ளாமல் இருப்​ப​தாகச் சொல்கி​றார்கள்.

    இது பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “முன்​னோடு​வதுதானே பின்னோடும். 1997-ல் தான் சேலம் மாவட்​டத்​தி​லிருந்து நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிந்தது. அப்போது கேகேவீ என்று சொல்லப்​படும் கே.கே.வீரப்பன் தான் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்​தார். அவரிடம் அரசியல் படித்த காந்திச்​செல்வன், பிற்பாடு மாவட்டச் செயலாளராக வந்தார். அப்போது மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலின், காந்திச்​செல்​வனுக்கு ஆதரவாக இருந்​தார். தன்னை ஓரங்கட்டிய அதிருப்​தியால் கேகேவீ காங்கிரஸில் இணைந்​தார்.

    ஆனால், அங்கு தாக்குப்​பிடிக்க முடியாமல் விலகிய அவர், மீண்டும் திமுக-வுக்கு வர தயாராக இருந்​தார். தலைமையும் அவரை ஏற்றுக்​கொள்ள தயாராகவே இருந்தது. ஆனால், காந்திச்​செல்வன் தரப்பு அவரை வரவிடாமல் தடுத்து நிறுத்​தி​விட்டது. இப்போது வரலாறு திரும்பி இருக்​கிறது. அன்றைக்கு காந்திச்​செல்வன் தரப்பினர் கேகேவீக்கு செய்ததை இப்போது காந்திச்​செல்​வனுக்கு ராஜேஸ்​குமார் தரப்பினர் செய்கி​றார்கள். அதனால் உதயநிதியே சொல்லியும் அவரால் திமுக-வுக்குள் அதிகாரம் செய்ய​முடிய​வில்லை” என்றனர்.

    ராஜேஸ்​குமார் ஆதரவாளர்களோ, “காந்​திச்​செல்வனை அண்ணன் (ராஜேஸ்​கு​மார்) ஒருபோதும் புறக்​கணிக்​க​வில்லை. அவரது மகன் திருமணத்​துக்​குக்கூட நேரில் சென்று வாழ்த்​தி​விட்​டுத்தானே வந்தார். அதேபோல், அவரை அரவணைத்துச் செல்லும்படி அண்ணனுக்கு உதயநிதி எந்த ஆலோசனையும் வழங்கிய​தாகவும் தெரிய​வில்லை” என்கி​றார்கள்.

    இதுதொடர்பாக காந்திச்​செல்​வனிடம் கேட்டதற்கு, “ராஜேஸ்​கு​மாரிடம் துணை முதல்வர் கூறியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரிய​வில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார்.லட்சம் பேரை நிற்​க​வைத்து நீதிக் கதை சொல்லும் திமுக-​வினருக்கு ஊரு ரெண்​டு​பட்டால் கூத்​தாடிக்கு கொண்​டாட்டம் என்ற கதை மட்டும் தெரி​யாமலா இருக்​கும்​?



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு

    September 1, 2025
    மாநிலம்

    மாநிலங்களவை சீட் தருவதாக உறுதி கூறிவிட்டு முதுகில் குத்திவிட்டார் பழனிசாமி: பிரேமலதா குற்றச்சாட்டு

    September 1, 2025
    மாநிலம்

    மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை மீட்கக் கோரிய வழக்கு: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

    September 1, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    September 1, 2025
    மாநிலம்

    “தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில் மோசடி செய்வதை மன்னிக்க முடியாது” – அன்புமணி

    September 1, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பூண்டு ஆரோக்கிய நன்மைகள்: கல்லீரல் செயல்பாடு முதல் கொழுப்பு வரை: பூண்டு உட்கொள்ள 5 காரணங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பை வீதிகளில் போராடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு
    • யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 200+ எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு
    • ஆப்டிகல் மாயை: 6 கள் கடலில் மறைக்கப்பட்ட எண் 9 ஐ வெறும் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “வாக்கு திருட்டு… பாஜகவுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது!” – பிஹார் பேரணியில் ராகுல் காந்தி தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.