Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கை துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை
    மாநிலம்

    இலங்கை துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை

    adminBy adminAugust 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை ஏலமிட நடவடிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொழும்பு: இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்தி, ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும், சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்தியதாலும், தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.

    இதில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள், தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 180 படகுகளை நாட்டுடைமையாக்கி உள்ளன. இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மயிலிட்டி துறைமுகத்தில் நிற்கும் 123 தமிழக மீன்பிடி படகுகளில் 48 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி, 7 படகுகள் ராமேசுவரம் மீனவர்களால் எடுத்துவரப்பட உள்ளன. மேலும், அரசுடைமையாக்கப்பட்ட 68 படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க, செப்டம்பர் முதல் வாரம் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட உள்ள நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அச்சுவேலி பகுதிக்கு கொண்டுசெல்வதற்காக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் படகுகள் பிரித்து எடுத்து மரக்கட்டைகளாகவும், விறகுகளாக்கி ஏலமிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கச்சத்தீவை இந்​தி​யா​வுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

    August 29, 2025
    மாநிலம்

    அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள்

    August 29, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

    August 29, 2025
    மாநிலம்

    சீட் கேட்டு அழுத்தம் தரும் ஆதரவாளர்கள்: தடைகளைத் தாண்டி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா உதயநிதி ஸ்டாலின்?

    August 29, 2025
    மாநிலம்

    பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் – முழு விவரம்!

    August 29, 2025
    மாநிலம்

    குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிகாலை 5 மணிக்கு எழுந்திருப்பது மூளையின் முழு திறனைத் திறக்கிறதா? சிறந்த நரம்பியல் விஞ்ஞானி விளக்குகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜப்பான், சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஆக.31-ல் சந்திக்கிறார்
    • சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம்
    • இந்தியா அளித்த எச்சரிக்கையால் உயிர் தப்பிய 1.5 லட்சம் பாகிஸ்தானியர் 
    • கச்சத்தீவை இந்​தி​யா​வுக்கு விட்டுக்கொடுக்க முடியாது: இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.