Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»சென்னை ஐஐடியில் இணையவழி தொழில்நுட்ப படிப்புகள்: இதுவரை 381 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன்!
    கல்வி

    சென்னை ஐஐடியில் இணையவழி தொழில்நுட்ப படிப்புகள்: இதுவரை 381 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன்!

    adminBy adminAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னை ஐஐடியில் இணையவழி தொழில்நுட்ப படிப்புகள்: இதுவரை 381 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 381 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியின் இணையவழி படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தேர்வை ஐஐடி நடத்துகிறது. அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இந்த 2 படிப்புகளை இணையவழியில் படித்துக் கொள்ளலாம்.

    வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமுள்ள இந்த படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிகளவில் சேர்க்க ஏதுவாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான தகுதித் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் பணிகளும் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.

    குறிப்பாக, சராசரியாக படிக்கும் மாணவர்களை இந்தப் படிப்பில் சேர்ப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை விரும்புகிறது. அவ்வாறு அடையாளம் காணப்படும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்துகிறது.

    இதுதவிர தேர்வில் தேர்வாகும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை ஐஐடியே வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது.

    மற்ற பிரிவினர் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இணையவழி கற்றல் என்பதால் இதனுடன் சேர்த்து வேறு படிப்புகளையும் மாணவர்கள் தொடரலாம். அதாவது, ஒரேநேரத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் முடிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 2022 முதல் இதுவரை 353 அரசுப் பள்ளி மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். தொடர்ந்து நடப்பாண்டிலும் இந்த படிப்புகளில் சேர 170 பேர் தகுதித் தேர்வை எழுதினர். அதில் 28 பேர் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பிஎஸ் தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேர இருக்கின்றனர்.

    இதையொட்டி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவர்ங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப் பிடித்து சாதனை படைக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

    August 29, 2025
    கல்வி

    பொறியியல் படிப்புகளில் புதிய தொழில்நுட்ப பாடங்கள்: ஜப்பான், ஜெர்மன், கொரிய மொழிகள் கற்கவும் வாய்ப்பு

    August 29, 2025
    கல்வி

    தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம்

    August 29, 2025
    கல்வி

    செப்.10 முதல் காலாண்டுத் தேர்வு: பள்ளிக் கல்வித் துறை அட்டவணை வெளியீடு

    August 29, 2025
    கல்வி

    ஏஐ மட்டும்தான் வேலையிழப்புக்குக் காரணமா?

    August 27, 2025
    கல்வி

    வேலைவாய்ப்புத் தரும் துணை மருத்துவப் படிப்புகள்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 17-வது குழந்தையைப் பெற்ற ராஜஸ்தானின் 55 வயது பெண்
    • அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க ஹெச்.ராஜா வேண்டுகோள்
    • தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் செயலி: காரில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
    • செப்.3 முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
    • அமெரிக்க விமானப்படையின்  எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.