Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»ஏஐ மட்டும்தான் வேலையிழப்புக்குக் காரணமா?
    கல்வி

    ஏஐ மட்டும்தான் வேலையிழப்புக்குக் காரணமா?

    adminBy adminAugust 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஏஐ மட்டும்தான் வேலையிழப்புக்குக் காரணமா?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குச் செயற்கை நுண் ணறிவின் (ஏஐ) தாக்கம் முக்கியமான காரணமாகக் கூறப்படும் நிலையில், வேறு சில காரணங்களும் பணி நீக்கங்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன.

    தகவல் தொழில்நுட்பத் துறைகளில் சில பணியாளர்களுக்கு பதிலாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, மென் பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, தரவுப் பகுப்பாய்வு போன்ற பணிகளில் ஏஐ பயன்படுத்தப்படுவதால், இப்பணிகளைச் செய்துவந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவருகிறது.

    உண்மை என்ன? – ஆனால், ஏஐ மட்டுமே வேலையிழப்புக்குக் காரணம் அல்ல; வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை, முதலீட்டு நிதி குறைவு போன்றவையும் பணியாளர்களிடம் நிலவும் திறன் குறைவும் பணி நீக்கங்களுக்கான முக்கியக் காரணங் களாகக் கருதப்படுகின்றன.

    திறன் அடிப்படையிலான பணியமர்த்தல் என்பது ஊழியர்களின் கல்வி, அனுபவம் அல்லது பொதுவான தகுதிகளை மட்டுமே பரிசீலிக்காமல், அவர்களிடம் உள்ள குறிப்பிட்ட திறன்கள் (technical skills, soft skills, problem-solving abilities), வேலைக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தேர்ந்தெடுக்கும் முறையாகும். இதில்தான் பலரும் பின்தங்குகிறார்கள்.

    செய்முறைப் பயிற்சியில் மேம்பாடு: நமது கல்வி அமைப்பில் செய்முறைப் பயிற்சி களில் நிலவும் குறைபாடானது, அறிவுசார் கற்றலில் பலருக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. வெறும் மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் தயார் செய்யும்போது, திறன் சார்ந்த பயிற்சிகளில் பின்தங்குவதால் பணி இடங்களில் மாணவர்கள் ஜொலிக்கத் தவறுகின்றனர்.

    பணியிடங்களில் ஊழியர்களுக்குத் திறன்குறைபாடு பல்வேறு காரணங்களால் ஏற்படு கிறது. முதலில், போதுமான பயிற்சியின்மை; புதிதாகப் பணியில் இணைந்த ஊழியர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படாதபோது, அவர்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

    தொழில்நுட்பப் பிரிவுகளில் போதிய அறிவுத்திறன் இல்லாததால், நவீனத் தொழில்நுட்பங் களைப் புரிந்துகொள்வதில் சில ஊழியர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். தனிப்பட்ட ஆர்வமின்மையும் பணியில் நிலவும் உற்சாகமின்மையும் ஊழியர்களிடம் திறன் குறை பாட்டை அதிகரிக்கின்றன.

    மேலும், ஊழியர்களின் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்காததும் ஊழியர்களின் திறமைகளுக்குரிய மதிப்பீடுகளையும் பாராட்டுகளையும் நிறுவனங்கள் வழங்காமல் இருப்பதும் பணியாளர்களிடம் ஏற்படும் திறன் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம் என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே, செய்முறைப் பயிற்சிகளை முறையாக அளிப்பதன் மூலமும் பணியாளர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலமும் அவர்களின் செயல்திறனைக் கல்லூரிகள் மேம்படுத்தலாம். பணியிடத்தின் சூழலை மேம்படுத்துவதன் மூலம், பணியாளர் களின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

    செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. ஆனால், அவை உருவாக்கும் வேலைகளுக்குத் தேவையான திறன்கள் தற்போது பல பணியாளர்களிடம் இல்லை. இதை வளர்த்துக்கொள்ள போதிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவைச் சரியான விதத்தில் திறனுடன் பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பணியாளர்கள் எதிர்கொள்ள முடியும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    வேலைவாய்ப்புத் தரும் துணை மருத்துவப் படிப்புகள்

    August 27, 2025
    கல்வி

    பொறியியல் கலந்தாய்வில் 800 எஸ்சி மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு: இறுதி ஒதுக்கீட்டு ஆணை இன்று வழங்கப்படும்

    August 27, 2025
    கல்வி

    10-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

    August 26, 2025
    கல்வி

    சென்னை, திருப்பூரைச் சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

    August 26, 2025
    கல்வி

    207 அரசு பள்ளிகள் மூடல் ஏன்? – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

    August 25, 2025
    கல்வி

    சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்
    • உங்கள் பல் வலியைக் காட்டும் 5 அறிகுறிகள் அவசர பல் மருத்துவர் வருகை தேவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
    • பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு
    • நவோமி ஒசாகா யு.எஸ். ஓபன் 2025 இல் ‘பில்லி ஜீன் பிளிங்’ லாபுபுவுடன் பிரகாசங்கள், பாணியை வழங்குகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.