Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர்
    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர்

    adminBy adminAugust 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்த புலியகுளம் முந்தி விநாயகர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி 4 டன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு புலியகுளம் முந்தி விநாயகர் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (ஆக.27) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் உள்ள விநாயகர் கோயில்களில் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரசித்தி பெற்ற, ஒரே கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்ட விநாயகரான புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகவேள்வி தொடங்கி சிறப்பு மகா அபிசேகம் நடைபெற்றது.

    இதில் 16 வகையான பல்வேறு வாசனை திரவியங்களல் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முந்தி விநாயகருக்கு சுமார் 50 கிலோ எடையில் சந்தன காப்புடன் 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யபட்டது. விநாயகருக்கு பிடித்த பலகாரங்களான கொழுக்கட்டை, அதிரசம், முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு பலகாரங்கள்லுடன் மகா தீபராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனமுருகி வேண்டி வணங்கினர்.

    அதேபோல், பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், கணபதி மாநகரில் உள்ள, வெற்றி விநாயகர் திருக்கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதிகாலை 108 சங்குபூஜை கணபதி ஹோமம், பெருவேள்வி நடைபெற்றது. 108 சங்கு தீர்த்தம் மற்றும் புண்ணிய நதிகளின் தீர்த்த்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து லட்சார்ச்சனை, மகா அன்னதானம் நடைபெற்றது. சரவணம்பட்டியில், சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரர் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்

    August 27, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு

    August 27, 2025
    மாநிலம்

    சென்னை: வாக்காளர் பட்டியல் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை கோரி மனு

    August 27, 2025
    மாநிலம்

    கடலூர் ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்: ஐகோர்ட் உத்தரவு

    August 27, 2025
    மாநிலம்

    வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம்

    August 27, 2025
    மாநிலம்

    பூந்தமல்லி பைபாஸ் – போரூர் மெட்ரோ ரயில் தடத்தில் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை வெற்றி

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையில் விநாயகர் சதுர்த்தி விற்பனை அமோகம்
    • உங்கள் பல் வலியைக் காட்டும் 5 அறிகுறிகள் அவசர பல் மருத்துவர் வருகை தேவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
    • பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் ஏரியை கையகப்படுத்த எதிர்ப்பு: விவசாயிகள் சங்கம் மனு
    • நவோமி ஒசாகா யு.எஸ். ஓபன் 2025 இல் ‘பில்லி ஜீன் பிளிங்’ லாபுபுவுடன் பிரகாசங்கள், பாணியை வழங்குகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.