Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    adminBy adminAugust 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டதைக் கண்​டித்து மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​திலிருந்து இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநக​ராட்சி மன்​றக்​கூட்​டம் மேயர் ஆர்​.பிரி​யா, தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

    அப்​போது, ரிப்​பன் மாளிகை முன்​பு, 13 நாட்​களாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களை வலுக்​கட்​டாய​மாக நள்ளிர​வில் கைது செய்​ததைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் 4 பேர், ‘தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்’ என கோஷம் எழுப்​பிய​வாறு மாமன்ற கூட்​டத்​திலிருந்து வெளிநடப்பு செய்​தனர்.

    சென்னை மாநகரில் தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்​து​வரு​வ​தாக கவுன்​சிலர்​கள் புகார் தெரி​வித்த நிலை​யில், அதற்கு பதில் அளித்த மேயர் பிரி​யா, ‘‘சென்​னை​யில் தெரு நாய்​களுக்கு தினசரி கருத்​தடை செய்​யப்​பட்டு வரு​கிறது.

    வளர்ப்பு நாய்​களை மாநகராட்​சி​யில் பதிவு செய்​ய​வும், தடுப்​பூசி போட​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. டிசம்​பர் மாதத்​துக்​குள் ஒரு மண்​டலத்​துக்கு ஒன்று வீதம் 15 இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் செயல்​பாட்​டுக்கு வரும். அப்​போது கருத்​தடை செய்​யப்​படும் நாய்​களின் எண்ணிக்கை அதி​கரிக்​கும்” என்​றார்.

    வால்​டாக்ஸ் சாலை​யில் உள்ள புதிய பல்​நோக்கு கட்​டிடத்​தில் 1,248 சதுரஅடி​யில், 2-வது தளத்​தில் ரூ.15,080 மாத வாடகை​யில், அன்னை தயாளு அம்​மாள் அறக்​கட்​டளை, வறுமைக்​கோட்​டுக்கு கீழ் வாழும் பொது​மக்​கள் மற்​றும் ஏழை, எளிய மாணவ, மாணவி​களுக்கு இலவச கணினி மற்​றும் தையல் பயிற்சி வகுப்பு நடத்த மாமன்ற கூட்​டத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டது. டி.பி.சத்திரம் பகு​தி​யில் மாநக​ராட்சி கட்​டிடத்​தில் ‘அரண்’ என்ற திருநங்​கைகள் தங்​கும் இல்​லம் செயல்​பட​வும் அனு​மதி அளிக்கப்பட்​டது.

    சென்னை மெரினா லூப் சாலை​யில் ரூ.1.56 கோடி​யில் குழந்​தைகள் விளை​யாட்டு பூங்கா அமைக்​க​வும், ஷெனாய் நகரில் உள்ள விளை​யாட்டு மைதானத்தை ரூ.5.30 கோடி​யில் மேம்​படுத்​த​வும், அம்​பத்​தூர் மண்​டலம் கள்​ளி​குப்​பம், அண்​ணாநகர் மண்​டலம் வில்​லி​வாக்​கம் ஆகிய பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி இறைச்​சிக் கூடங்​களை ரூ.5.41 கோடி​யில் மேம்​படுத்​த​வும் கூட்​டத்​தில் அனுமதி அளிக்​கப்​பட்டது.

    மெரினா கடற்​கரை, காம​ராஜர் சாலையை பாரம்​பரிய வழித்​தட​மாக மாற்ற சிஎம்​டிஏ திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, மெரினா காமராஜர் சாலை​யில் 2.3 கி.மீ. நீளத்​துக்கு 4 மீட்​டர் அகலத்​தில் சைக்​கிள் பாதை உரு​வாக்​கப்பட உள்​ளது. காம​ராஜர் சாலை​யின் இரு​புற​மும் 9 பேருந்து நிறுத்​தங்​களும், 3 புறக்​காவல் நிலை​யங்​களும் அமைக்​கப்பட உள்​ளன. மேலும், 15 மாநக​ராட்சி பள்​ளி​களில் சுத்​தி​கரிக்​கப்​பட்ட தானி​யங்கி குடிநீர் மையங்​களை ரூ.1.75 கோடி​யில் அமைக்​க​வும், பள்ளி மாணவர்​கள் எண்​ணிக்​கைக்கு ஏற்ப 1,747 தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களை பணி​யமர்த்​த​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது. மொத்​தம்​ 84 தீர்​மானங்​கள்​ நிறைவேற்றப்​பட்​டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்

    August 27, 2025
    மாநிலம்

    ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

    August 27, 2025
    மாநிலம்

    ஆக. 28ல் சென்னை மாநகராட்சியின் 10 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

    August 27, 2025
    மாநிலம்

    மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி

    August 27, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ

    August 27, 2025
    மாநிலம்

    ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து பேசிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ டீசர் எப்படி? – 2040-ல் ஒரு காதல் கதை!
    • விநாயகர் சதுர்த்தி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம்
    • ஸ்பாட் ஜாகிங் 15 நிமிடங்கள் மற்றும் 30 நிமிடங்கள் ப்ரிஸ்க் நடைபயிற்சி: இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உடற்பயிற்சி
    • ’திரெளபதி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • ட்ரம்ப்பின் வரி விதிப்பை கண்டித்து செப். 5-ல் ஆர்ப்பாட்டம் – இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.