Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்
    தேசியம்

    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

    adminBy adminAugust 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

    இந்தியா மீது எதிர்காலத்தில் போர் மூண்டால், குஜராத்தின் ஜாம்நகர் எல்லைப் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து, டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய இடங்களை, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்கு சுதர்சன சக்கரம் என பெயரிடப்படவுள்ளது.

    இத்திட்டம் குறித்து இந்தூரில் உள்ள ராணுவ போர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் பேசியதாவது: சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பில் முப்படைகளைச் சேர்ந்த ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வலுவான பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும். இதை உருவாக்க ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறையும் தேவை. இது இஸ்ரேலின் அயர்ன் டோம் போல, அனைத்து கால நிலைகளிலும், நாட்டை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாக இருக்கும்.

    இதற்காக தரைவழி, வான் வழி, விண்வெளி கடல் வழி, கடலுக்கு அடியில் உள்ள சென்சார்களை ஒருங்கிணைத்து உளவுத் தகவல், கண்காணிப்பை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். சுதர்சன சக்கரம் வான்பாதுகாப்பு திட்டத்துக்கு முப்படைகளில் உள்ள பல கருவிகளை ஒருங்கிணைக்க மிகப் பெரிய முயற்சிகள் தேவை.

    இத்திட்டத்துக்கு செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட கணினி செயல்பாடு, தரவு மற்றும் தரவு பகுப்பாய்வு, குவாண்டம் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை பயன்படுத்த வேண்டும். சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு திட்டம் 2035-ம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அனில் சவுகான் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    August 27, 2025
    தேசியம்

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

    August 27, 2025
    தேசியம்

    “50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

    August 26, 2025
    தேசியம்

    ஜம்முவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

    August 26, 2025
    தேசியம்

    கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

    August 26, 2025
    தேசியம்

    பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர்

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மறைக்கப்பட்ட ஆபத்து: மிகவும் கண்டிப்பான உணவு அட்டவணைகளுக்கு எதிராக நிபுணர் எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐ.சி.எம்.ஆர் ஆய்வு இந்திய பெண்களிடையே முதல் இரண்டு புற்றுநோய்களை வெளிப்படுத்துகிறது; முன்கூட்டியே கண்டறிதல் இறப்புகளைத் தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டீன் புற்றுநோய் எச்சரிக்கை: 19 வயதான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி மறைக்கப்பட்ட கட்டி வெளிப்படுத்தப்பட்டது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் தாவரங்களை பாதுகாக்கும் மற்றும் தோட்ட பூச்சிகளைக் குறைக்கும் 5 அத்தியாவசிய பூச்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.