Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி
    மாநிலம்

    ​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர்.

    விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கிய பழனிசாமி, விவசாயிகள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய நெல் மணிகள் மற்றும் பூக்களை காவிரி ஆற்றில் தூவி காவிரியை வணங்கினார். அப்போது விவசாயிகள், ‘’காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில், ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். மத்திய அரசிடம் பேசி இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னெடுப்பு செய்தீர்கள். இந்த திட்டம் நிறைவேறினால் சாயக்கழிவு, கழிவுநீர் போன்றவை ஆற்றில் கலந்து நீர் மாசுபடுவது முழுமையாகத் தடுக்கப்படும். இதன் மூலம் நீர் ஆதாரமும் மேம்படும். மத்திய அரசுடன் இணைந்து நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொடுத்த உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதோடு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டி நீர் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களிடம் பேசிய பழனிசாமி, “ஏற்கனவே ஆதனூர், குமாரமங்கலம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டியிருக்கிறோம். மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு திட்டத்தை கைவிட்டு விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், தடுப்பணை கட்டும்போது அந்த இடத்தைச் சுற்றிய நிலங்களும், மக்களும் பாதிக்கப்படக் கூடாது. அதுபோன்ற இடங்களை ஆய்வு செய்தே அமைக்க முடியும். அதனால் முழுமையாக ஆராய்ந்து தடுப்பணை அமைத்துக் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு பேருந்தில் ஏறி புறப்பட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு

    August 25, 2025
    மாநிலம்

    நீதிமன்றம் விடுவித்த படகுகளை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் குழுவினர் இன்று படகில் இலங்கை பயணம்

    August 25, 2025
    மாநிலம்

    இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

    August 25, 2025
    மாநிலம்

    வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம்

    August 25, 2025
    மாநிலம்

    ​​​​​​​ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி: வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன் என உறுதி

    August 25, 2025
    மாநிலம்

    ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதி உடனே ரத்து: அரசு நடவடிக்கை

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புஜாரா ஓய்வு: பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி – காரணம் என்ன?
    • மேட்டூர் நீர்மட்டம் 5 நாளாக முழு கொள்ளளவில் நீடிப்பு
    • இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் பயணிக்க 10 இடங்கள்
    • ஸ்டார்ஷிப் பின்னடைவு: எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்க்ரப்ஸ் பத்தாவது சோதனை விமானம்; தரை அமைப்புகள் தடுமாற்றம் தொடங்குதல் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ​​​​​​​அப்போது ரூ.7,000, இப்போது ரூ.6,755 கோடி: பால் வியாபாரத்தில் கோலோச்சும் சந்திரபாபு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.