Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டியை ஆதரிப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    மாநிலம்

    நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டியை ஆதரிப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டியை ஆதரிப்போம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நீதி மற்றும் மனிதநேயத்துக்காகப் போராடிய சுதர்சன் ரெட்டி இப்போது தேவைப்படுகிறார். அரசியலமைப்பை அழிக்க பாஜக முயல்வதால், அதைப் பாதுகாக்க அவர் நமக்குத் தேவை. அவரை நாம் ஆதரிப்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பி.சுதர்சன் ரெட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், இவ்வாறு கூறினார்.

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில், தெலங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து இண்டியா கூட்டணி தலைவர்களை சந்தித்து சுதர்சன் ரெட்டி நேரில் ஆதரவு கோரி வருகிறார். அந்தவகையில், இன்று சென்னை வந்த அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

    நிகழ்ச்சியில் பேசிய சுதர்சன் ரெட்டி, “தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்தாக்க சிந்தனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஒரு நீதிபதியாக நான் அரசியலமைப்பை நிலைநிறுத்திக் கொண்டிருந்தேன். தற்போது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற்றால், இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என தெரிவித்தார்.

    சுதர்சன் ரெட்டியை ஆதரித்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உங்களை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக அவர் (சுதர்சன் ரெட்டி) நீதிக்காக பாடுபட்டுள்ளார். நேர்மையான நீதிபதியாக பணியாற்றி அரசியலமைப்பை பாதுகாத்தார்.

    தமிழ்நாட்டின் உணர்வகளை சுதர்சன் ரெட்டி மதிப்பார். அதனால்தான் அவர் தேசிய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்கும் ஒரு நிகழ்வில், தேசிய பொருளாதாரக் கொள்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்காது என்று பேசினார். அவரை ஆதரிக்க இதைவிட சிறந்த காரணம் நமக்கு வேண்டுமா?

    ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இவரை நக்ஸல் ஆதரவாளர் என கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்களால் முடியவில்லை. அதற்காக அவர் மீது பழி சுமத்த விரும்புகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதிராக பாஜக எல்லாவற்றையும் செய்து வருகிறது. தமிழர் என்ற போர்வையில் அக்கட்சி ஆதரவை கோருகிறது. இது ஒரு பழைய தந்திரம். எனவே, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நீதி மற்றும் மனிதநேயத்துக்காகப் போராடிய சுதர்சன் ரெட்டி இப்போது தேவைப்படுகிறார்” என்று கூறினார்.

    நிகழ்ச்சியில், டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, வில்சன், திருமாவளவன் உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் 

    December 2, 2025
    மாநிலம்

    சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை

    December 2, 2025
    மாநிலம்

    வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் தவெகவுக்கு வெற்றி: ஏ.சி.சண்முகம் கருத்து

    December 2, 2025
    மாநிலம்

    தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் நாமக்கல் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    December 2, 2025
    மாநிலம்

    எஸ்ஐஆரில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக வலியுறுத்தல்

    December 2, 2025
    மாநிலம்

    தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை ​கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கலாமை கொண்டாடுவோம்: விண்வெளி அருங்காட்சியகம் முதல் டெல்லி இல்லம் வரை
    • ஹாங்​காங் சிக்​ஸஸ் போட்டி: பாகிஸ்​தான் அணி சாம்​பியன்
    • டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம்
    • தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! – ஹேமமாலினி விளக்கம்
    • வன்னியர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றும் அளவுக்கு சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.