Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
    விளையாட்டு

    ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    37 வயதான புஜாரா இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். கடைசியாக கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

    இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 43.61. மொத்தம் 16,217 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2010-ல் இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார்.

    தடுப்புமுறை ஆட்டத்திற்கு பெயர் போனவர். இக்கட்டான சூழலில் அணியின் மீட்பராக செயல்பட்டு விளையாடும் திறன் படைத்தவர். களத்தில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக வீசும் பந்தை அறிந்து அதை ஆடாமல் அப்படியே லீவ் செய்யும் கலையில் கைதேர்ந்தவர்.

    இந்திய அணிக்காக (ஆல்-டைம்) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 8-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,074 ரன்களை சேர்த்துள்ளார். 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் இதில் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 49.38. இந்திய அணிக்காக 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களை கடந்துள்ளார்.

    இந்த சூழலில் சுமார் இரண்டு ஆண்டு காலமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் இந்த நிலை தொடர்ந்தது. இதே நிலை ரஹானேவும் எதிர்கொண்டு வருகிறார். அண்மையில் முடிந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கோலி மற்றும் ரோஹித் சர்மா என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த சூழலில் புஜாராவும் இப்போது ஓய்வு அறிவித்துள்ளார்.

    “இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு, தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறை ஆட்டக்களத்தில் களம்காணும் போது என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வேன். இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அனைத்து நல்ல விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டு என எல்லோரும் சொல்வதுண்டு. அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்க் யூ” என தனது சமூக வலைதள பதிவில் புஜாரா கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    உங்கள் ‘கோச்’-ஐ என்னிடம் நெருங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்: திராவிட் வசம் கூறிய சேவாக்

    August 24, 2025
    விளையாட்டு

    கிரீன், ஹெட், மார்ஷ் சதம் விளாசல்: ஆஸி. 431 ரன்கள் குவிப்பு | AUS vs SA 3-வது ODI

    August 24, 2025
    விளையாட்டு

    மறக்க முடியாத நாள்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொன்னான தினம்!

    August 24, 2025
    விளையாட்டு

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்றது அர்ஜுன் – இளவேனில் ஜோடி!

    August 24, 2025
    விளையாட்டு

    மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி

    August 24, 2025
    விளையாட்டு

    யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: ரூ.747 கோடி பரிசுத் தொகை

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 5 அழகான மற்றும் அமைதியான பள்ளிப்படிப்பு மீன் ஆரம்பத்தில் வீட்டு மீன்வளங்களை வைத்திருக்க சரியானது
    • லண்டனில் உள்ள இந்திய உணவகம் மீது ஆர்சன் தாக்குதல்: டீனேஜர், மனிதன் வைத்திருந்தான்; காயமடைந்த இரண்டு பேர் – இந்தியாவின் காலங்கள்
    • தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு 
    • பல குவாக்களை சாப்பிடுவது சிறுநீரகத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்; அவற்றை உங்கள் உணவில் சேர்க்க பாதுகாப்பான வழிகளை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற விவசாய சங்கங்கள் கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.