Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்!
    ஆன்மீகம்

    புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்!

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு, மூத்தக் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று, இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

    இது குறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2025- 26ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாண்டு 2,000 பக்தர்கள் வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது.

    இதை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர். புரட்டாசி மாத வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது, செப்.20,27, அக்.4,11 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளன.

    இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்.25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    புத்திர தோஷம் போக்கும் குடவாசல் கோணேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

    August 24, 2025
    ஆன்மீகம்

    திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    August 24, 2025
    ஆன்மீகம்

    மேல்மலையனூர் கோயிலில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

    August 24, 2025
    ஆன்மீகம்

    திருப்பதியில் ஜூலை மாதத்தில் 1.24 கோடி லட்டு பிரசாதம் விற்பனை

    August 23, 2025
    ஆன்மீகம்

    ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை காணிக்கை அளிக்கும் பக்தர்

    August 22, 2025
    ஆன்மீகம்

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற விவசாய சங்கங்கள் கோரிக்கை
    • இந்த 9 அன்றாட பொருட்களை உங்கள் குளிர்சாதன பெட்டி வாசலில் சேமிப்பதை நிறுத்துங்கள்; காரணம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு
    • ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் விஜய்யை கண்டித்து திமுகவினர் போஸ்டர்
    • இந்தியா அல்ல, ஆனால் இந்த நாடு உலகின் மிக உயரமான கணேஷா சிலைக்கு சொந்தமானது; அதன் பெயர் ‘டி’ – டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற எழுத்துடன் தொடங்குகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.