Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி
    தேசியம்

    தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி

    adminBy adminAugust 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தர்மஸ்தலா வழக்கு: தவறான தகவல்களை அளித்ததாக புகார்தாரரை கைது செய்தது எஸ்ஐடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: தர்மஸ்தலா கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த விவகாரம் குறித்து புகாரளித்த 50 வயது தூய்மைப் பணியாளரை கைது செய்துள்ளது.

    1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், நூற்றுக்கணக்கான பெண்கள் / சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாகப் பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    2014இல் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை உருவாக்கியது.

    தர்மஸ்தலா வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, தவறான தகவல்களை அளித்து கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டி, இவ்விவகாரத்தில் புகார் தெரிவித்த 50 வயது தூய்மைப் பணியாளர் இன்று காலையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

    தனது குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், காவல்துறையினர் முன்பு புகார்தாரர் ஆரம்பத்தில் புதைக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்றை தோண்டி எடுத்துள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், புகார்தாரர் ஆரம்பத்தில் சமர்ப்பித்த மண்டை ஓடு போலியானது என்று தெரியவந்தது. இதன் பின்னர் அவர் பொய் சாட்சியம் அளித்தல் மற்றும் தவறான ஆதாரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இன்று மாலை அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு, புகார்தாரர் மருத்துவ பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    முன்னதாக, புகார் தெரிவித்த அந்த நபர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘மண்அரிப்பு, காடுகளின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக சில புதைகுழிகள் தொலைந்து போயிருக்கலாம். பகல் நேரத்தில் உடல்களை புதைப்பதை உள்ளூர்வாசிகள் பார்த்தனர். ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவோ அல்லது விசாரிக்கவோ இல்லை. கோயிலின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதால் எனக்கு என்ன லாபம்? நான் ஒரு இந்து, ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவன்”என்றார்.

    சமீபத்தில், இவ்விவகாரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா சட்டப்பேரவையில் பேசுகையில், சிறப்பு விசாரணைக் குழு புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனக் கண்டறிந்தால், புகார்தாரருக்கு எதிராக சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை, ஆனால்…” – கிரண் ரிஜிஜு தகவல்

    August 23, 2025
    தேசியம்

    “ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவா?” – பதவி பறிப்பு மசோதா விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் கேள்வி

    August 23, 2025
    தேசியம்

    இந்தியாவில் ‘ஜனநாயக பற்றாக்குறை’ நிலவுகிறது: சுதர்சன் ரெட்டி கருத்து

    August 23, 2025
    தேசியம்

    அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் ஆக.25 முதல் நிறுத்தம்: ட்ரம்ப்பின் 50% வரிக்கு இந்தியா பதிலடி

    August 23, 2025
    தேசியம்

    “இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையம் நிறுவும்” – பிரதமர் மோடி தகவல்

    August 23, 2025
    தேசியம்

    ‘நான் கொல்லப்பட்டால் கட்சியும், நீங்களும்தான் பொறுப்பு’ – அகிலேஷுக்கு பெண் எம்எல்ஏ கடிதம்

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை மாநாடு வெற்றி; மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே இலக்கு: விஜய் கடிதம்
    • உடற்பயிற்சி சப்ளிமெண்ட்ஸ் உங்கள் இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நிவேதா முருகனை எதிர்க்க நிஜமான காரணம் இதுதானா? – மல்லுக்கட்டை நிறுத்தாத மயிலாடுதுறை திமுக!
    • உங்கள் தக்காளி செடிகள் பூக்கும் என்பதற்கான 10 காரணங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.