Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சிறையில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்ட அவலம்: எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்
    தேசியம்

    சிறையில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்ட அவலம்: எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்

    adminBy adminAugust 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறையில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்ட அவலம்: எதிர்க்கட்சிகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கயா: சிறை​யில் இருந்து கொண்டே கோப்​பு​களில் கையெழுத்​திடப்​படும் சம்​பவங்​களை​யும் நாம் பார்த்​தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்​டல் செய்​தார். சிறை​யில் 30 நாட்​கள் இருந்​தால் பிரதமர், முதல்​வர்​கள் மற்​றும் அமைச்​சர்​களை பதவி நீக்​கம் செய்​யும் மசோ​தாவை மத்​திய அரசு கொண்டு வந்​தது. இதை எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக எதிர்த்து வரு​கின்​றன.

    இந்​நிலை​யில் பிஹாரில் ரூ.13,000 கோடி மதிப்​பில் பல்​வேறு வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து அடிக்​கல் நாட்​டி​னார். இதில் மின்​சா​ரம், சாலைகள், சுகா​தா​ரம், நகர்ப்​புற கட்​டமைப்பு மற்​றும் குடிநீர் விநி​யோக திட்​டங்​கள் அடங்கும்.

    கயா மற்​றும் டெல்​லி, வைஷாலி மற்​றும் கோதெர்மா இடையே அம்​ரித் பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயிலை​யும் பிரதமர் மோடி தொடங்கி வைத்​து பேசி​ய​தாவது: ராஷ்ட்​ரிய ஜனதா ஆட்சி காலத்​தில் பிஹார் இருந்த நிலையை மக்​கள் நினைத்து பார்க்க வேண்​டும். ஒட்​டுமொத்த மாநிலத்​தை​யும் ராஷ்ட்​ரிய ஜனதா தளம் இருளில் தள்​ளியது. கல்​வி​யும் இல்​லை, வேலை​வாய்ப்​பும் இல்​லை. மக்​கள் வேலை வாய்ப்​புக்​காக இடம் பெயர்ந்து வந்​தனர். மக்​களை ஒட்டு வங்​கி​களாக மட்​டுமே ராஷ்ட்​ரிய ஜனதா தளம் பார்த்​தது.

    பிஹார் மக்​களை உள்ளே விட மாட்​டோம் என காங்​கிரஸ் முதல்​வர் ஒரு​வர் கூறி​னார். அவரது மாநிலத்​தில் பிஹார் மக்​கள் நுழைய அவர் அனு​ம​திக்க மாட்​டார். பிஹார் மக்​கள் மீது காங்​கிரஸ் கொண்​டிருந்த வெறுப்பை யாரும் மறக்க முடி​யாது. பிஹார் இளைஞர்​களின் முன்​னேற்​றத்​துக்கு தே.ஜ கூட்​ட​ணி​தான் கடின​மாக உழைக்​கிறது.

    அரசு துறை​களில் பணி​யாற்​றும் பியூன், ஓட்​டுநர், எழுத்​தர் போன்ற பணி​யாளர்​கள் 50 மணி நேரம் சிறை​யில் இருந்​தால், அவர் வேலையை இழக்க நேரிடு​கிறது. ஆனால், ஒரு முதல்​வரோ, அமைச்​சரோ, பிரதமரோ சிறை​யில் இருந்​தா​லும் அரசு பணி​யில் தொடர்​கிறார். சிறை​யில் இருந்தே கோப்​பு​கள் கையெழுத்​திட்ட அவலத்தை பார்த்​தோம்.

    அரசி​யல் கட்சி தலை​வர்​கள் இது​போன்ற மனநிலை​யில் இருந்​தால், நாம் எப்​படி ஊழலுக்கு எதி​ராக போராட முடி​யும். ஊழலை ஒழிக்க தே.ஜ கூட்​டணி அரசு சட்​டம் கொண்டு வரு​கிறது. இதன் வரம்​புக்​குள் பிரதமரும் வரு​கிறார். ஆனால், காங்​கிரஸ், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இந்த புதிய சட்​டத்தை எதிர்க்​கின்​றன.

    சிறை​யில் இருப்​பவர், அரசி​யல் சாசன பதவி​களில் எல்​லாம் தொடர முடி​யும் என ராஜேந்​திர பாபு போன்ற நம் முன்​னோர்​கள் கற்​பனை செய்து கூட பார்த்​திருக்க மாட்​டார்​கள். தவறு செய்​யும் தலை​வர்​கள் அதன் விளைவு​களை நினைத்து பயப்​படு​கின்​றனர்.

    ஊடுரு​வல்​காரர்​களுக்கு பாது​காப்பு: நாட்​டுக்​குள் சட்​ட​விரோத​மாக ஊடுரு​விய​வர்​களை​யும், ஓட்டு வங்​கிக்​காக காங்​கிரஸ், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் போன்ற எதிர்க்​கட்​சிகள் பாது​காக்​கின்​றன. நாட்​டில் உள்ள இளைஞர்​களின் உரிமையை ஊடுரு​வல்​காரர்​கள் பறிக்க நாங்​கள் அனு​ம​திக்க முடி​யாது. அவர்​கள் அடை​யாளம் காணப்​படு​வதை நாங்​கள் உறுதி செய்​வோம். இந்த ஊடுரு​வல்​காரர்​கள் பற்றி பிஹார்​ மக்​கள்​ மிக​வும்​ கவன​முடன்​ இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு

    August 23, 2025
    தேசியம்

    ஒடிசா: எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மோகன் சரண் மாஜி

    August 23, 2025
    தேசியம்

    இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை செப்.24 வரை நீட்டிப்பு

    August 23, 2025
    தேசியம்

    உத்தராகண்டில் மேக வெடிப்பு: இருவர் மாயம்; கடைகள், வாகனங்கள் கடும் சேதம்

    August 23, 2025
    தேசியம்

    பிரதமர் குறித்த விமர்சனத்துக்காக FIR பதிவு பற்றி பயப்படவில்லை: தேஜஸ்வி யாதவ்

    August 23, 2025
    தேசியம்

    ரூ.2,000 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

    August 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீண்டும் இணையும் விஷால் – அஞ்சலி கூட்டணி
    • ஆக.30-ல் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்
    • தெரு நாய்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி: வேலை செய்யும் பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விவசாயிகளின் நலன்களில் இந்தியா சமரசம் செய்யாது: அமெரிக்க வரிகளுக்கு ஜெய்சங்கர் கடும் எதிர்ப்பு
    • பல படங்களில் திருப்தியின்றி நடித்துள்ளேன்: சமந்தா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.