Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு
    தேசியம்

    இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது: பதவி பறிப்பு மசோதா பற்றி பிரதமர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பாட்னா: அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அவர் இன்று பிஹாரில் பேசுகையில், ‘ஊழலை ஒழிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னெடுப்பு இது. இனி சிறையிலிருந்து யாரும் ஆட்சி செய்ய முடியாது.’ என்று கூறினார்.

    பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிரதமர் மோடி 2-வது முறையாக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் இருந்தனர்.

    தொடர்ந்து கயாஜியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

    இதனையடுத்து பிரதமர் பேசியதாவது: ஓர் அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டால். அடுத்த 50 மணி நேரத்தில் அவரது வேலை பறிபோகிறது. ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர், ஏன் பிரதமர் கூட சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்தலாம். சில நாட்களுக்கு முன்னர் நாம் சிறையிலிருந்து அரசு உத்தரவுகள் பறந்ததைப் பார்த்தோம். தலைவர்களுக்கு இதுபோன்ற மனப்பாண்மை இருந்தால், நாம் ஊழலை எப்படி ஒழிப்பது. அதனால் தான் நாம் ஊழலுக்கு எதிரான இந்த புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். அந்த வரம்புக்குள் பிரதமரும் வருகிறார்.

    ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகள்தான் தங்களது பதவிகளை இழக்க வேண்டும். எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகளே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றன. இவ்வாறு பிரதமர் கூறினார்.

    ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முதல்நாள் இந்தக் கூட்டத்தொடர் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

    மக்கள் வெறும் வாக்கு வங்கி அல்ல – பதவி பறிப்பு மசோதாவைத் தாண்டி பேசிய பிரதமர், “பிஹார் எனும் புனித பூமியில் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானமும் வீண் போகாது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றுப்பட்டது

    ஆனால், பிஹார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை. அவர்களின் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு இல்லாமல் பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

    August 24, 2025
    தேசியம்

    பிஹார் SIR: 98% வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் – தேர்தல் ஆணையம் தகவல்

    August 24, 2025
    தேசியம்

    ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ

    August 24, 2025
    தேசியம்

    இந்துக்களை அவமதிக்கும் பினராயி விஜயனும் ஸ்டாலினும் ஐயப்ப சங்கமத்தில் பங்கேற்பதா? – பாஜக கண்டனம்

    August 24, 2025
    தேசியம்

    வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை: பாஜக

    August 24, 2025
    தேசியம்

    சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க பாடுபட வேண்டும்: அமித் ஷா

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஊதா தோடி, கோல்டன் சிம்மாசனம்: கணேஷ் சதுர்த்தியை விட லல்பாகா ராஜா 2025 இன் பிரமாண்டமான வெளிப்பாடு உங்களை திகைக்க வைக்கும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைப்பதில் திமுக திரைமறைவில் தில்லுமுல்லு: டிடிவி தினகரன்
    • முதல்வரை தரம் தாழ்ந்து பேசிய விஜய் மீது வழக்கு: திமுக மாநில வர்த்தக அணி நிர்வாகிகள் தீர்மானம்
    • ​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி
    • தில் சஹ்தா ஹை முதல் ஜோதா அக்பர் வரை: பெரிய திரையில் உருவாக்கப்பட்ட சின்னமான கோட்டைகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.