நாக்பூர்: அக்டோபர் 2-ம் தேதி நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “அக்டோபர் 2-ல் நாக்பூரில் ரேஷிம்பாக் திடலில் காலை 7.40 மணியளவில் விஜயதசமி விழா நடைபெறுகிறது. அந்த விழாவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார்.
விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சிறப்புரையாற்றுவார். இந்த ஆண்டு விஜயதசமி விழா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழா கொண்டாட்டத்துடன் நடைபெறுகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.