Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம்
    தேசியம்

    மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம்

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும் என உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு கருத்து தெரி​வித்​துள்​ளது.

    மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது நாளாக நடந்​தது.

    அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசி​யல் சாசன அமைப்பு மற்​றொரு அரசி​யல் சாசன அதி​காரம் படைத்த அமைப்​புக்கு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது என்​பதை உச்ச நீதி​மன்​றம் ராமசந்​திர ராவ் வழக்​கில் ஏற்​கெனவே தெளிவுபடு்த்​தி​உள்​ளது. ஒரு​வேளை உச்ச நீதி​மன்​றம் காலநிர்​ண​யம் செய்​வ​தாக இருந்​தா​லும் அதை உத்​தர​வாக அல்​லாமல் பரிந்​துரை​யாக செய்​திருக்க வேண்​டும். சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் பல்​வேறு அளவு​கோல்​கள், காரணங்​கள், இடர்​பாடு​கள் உள்​ளன. அனைத்​தை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும்’’ என்​றார்.

    அதற்கு நீதிப​தி​கள், ‘‘அதற்​காக தொடர்ந்து எந்த காரண​மும் தெரிவிக்​காமல் கிடப்​பில் போட்​டால் அத்​துடன் எல்​லாம் முடிந்து விடு​மா, அதற்கு தீர்வு காண வேண்​டா​மா’’ என்​றனர். பதி​லுக்கு துஷார் மேத்​தா, ‘‘அரசி​யல் சாசன சட்​டத்​தில் இவ்​வாறு எந்த காலநிர்​ணய​மும் செய்​யப்​ப​டாத போது உச்ச நீதி​மன்​றம் அதில் குறுக்​கிட்டு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது. அது நாடாளு​மன்​றத்​தி்ன் பணி. அரசி​யல் ரீதியி​லான தீர்வு தான் சரி​யாக இருக்​கும். நாட்​டில் உள்ள அனைத்து பிரச்​சினை​களுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தில் தீர்வு கிடைத்​து​வி​டாது. அத்​தகைய பிரச்​சினை​களுக்கு அரசி​யல் சாசன சட்ட ரீதி​யாகவே தீர்வு காண முடி​யும்’’ என்​றார்.

    அப்​போது தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், ‘‘அந்த அரசி​யல் சாசன சட்​டத்​தின் தலை​மைப் பாது​காவலரே உச்ச நீதி​மன்​றம் தான். குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர் என அரசி​யல் சாசன பதவி வகிக்​கும் ஒரு​வர் காரணமின்றி தனது கடமையை செய்ய மறுத்​தால் உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​றங்​களும் கைகட்​டிக்​கொண்டு வேடிக்​கைப்பார்க்க வேண்​டும் எனக்​கூற முடி​யு​மா? நீதித்​துறை அமைப்​பு​களுக்கு அதி​காரம் இல்​லை​யா? தவறு நடந்​தால் அதற்கு தீர்வு காண வேண்​டா​மா? கால​வரையற்ற அதி​காரம் ஆளுநருக்கு இருப்​ப​தாகக் கூறி​னால் முறை​யாக மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேர​வைக்கு என்ன அதி​காரம் உள்​ளது’’ என்​றார்.

    அதற்கு துஷார் மேத்​தா, சட்​ட​மியற்​றும் பணியை உச்ச நீதி​மன்​றம் மேற்​கொள்ள முடி​யாது. சட்​டப்​பேர​வை, அரசு நிர்​வாகம், நீதித்​துறை என ஒவ்​வொரு அமைப்​பு​களுக்​கும் ஒவ்​வொரு வித​மான பணி​கள் உள்​ளன. இவையனைத்​துமே அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பாது​காவலர்​களே. குடியரசுத் தலை​வரும், ஆளுநர்​களும் இப்​படித்​தான் செய​லாற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் இவர்​களின்

    அதி​காரங்​களை நீதி​மன்ற பரிசோதனைக்கு உட்​படுத்த முடி​யாது. இதற்கு ஒரே தீர்வு அரசி​யல் சாசனத்தை திருத்​து​வது​தான். அது​வரை இந்த பிரச்​னைக்கு அரசி​யல் ரீதி​யாகத்​தான் தீர்வு காண வேண்​டும். ஆனால் உச்ச நீதி​மன்​றம் தனது சிறப்பு அதி​காரத்தை பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை திருத்த முடி​யாது, என்​றார்.

    அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்கும் விவ​காரத்தை நீதி​மன்றவிசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யும். பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும். இந்த விஷ​யத்​தில் தமிழகம் மட்​டுமல்​லாது வேறு சில மாநிலங்​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத்​ தொடர்ந்​துள்​ளன’’ எனக்​கூறி இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.26-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: இண்டியா கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

    August 22, 2025
    தேசியம்

    தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000+ சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே அமைச்சர்

    August 21, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒப்புக்கொண்டது ஏன்? – சுதர்சன் ரெட்டி விளக்கம்

    August 21, 2025
    தேசியம்

    பதவி பறிப்பு மசோதாவை கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்

    August 21, 2025
    தேசியம்

    மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவு – நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

    August 21, 2025
    தேசியம்

    விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்போதுமே அழகாகத் தெரிகிறது: ஷுபன்ஷு சுக்லா

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக சேர்மனுக்கு ஓட்டுப் போட்ட அதிமுக கவுன்சிலர்கள்! – பேசி வளைத்தார்களா… பேமென்ட் கொடுத்தார்களா?
    • நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்: நுரையீரல் புற்றுநோயின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் தள்ளுபடி செய்யப்படக்கூடாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அனலைக் கிளப்பும் ஆம்புலன்ஸ் அரசியல்… அன்றும் இன்றும்!
    • தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா? – தொண்டர்கள் கூட்டத்தில் விஜய் சவால்
    • ‘ரோட்டி மற்றும் சப்ஸி’ சாப்பிடுவது இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.