Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»2 பேருக்கு ஒரே ஆதார் எண் வழங்கியதால் 8 ஆண்டாக போராடும் மாணவி!
    மாநிலம்

    2 பேருக்கு ஒரே ஆதார் எண் வழங்கியதால் 8 ஆண்டாக போராடும் மாணவி!

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2 பேருக்கு ஒரே ஆதார் எண் வழங்கியதால் 8 ஆண்டாக போராடும் மாணவி!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.

    இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் மகள் நாடீஸ்வரி (18). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்றபோது ஆதார் எடுத்தார். அதே சமயத்தில் அதே பள்ளியில் பயின்ற ஜெஸ்மி என்பவரும் ஆதார் எடுத்தார். அப்போது இருவருக்கும் ஒரே ஆதார் எண் வந்துள்ளது. இதை யாரும் கவனிக்காத நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடீஸ்வரி பெயரை அவரது குடும்ப அட்டையில் சேர்க்க முயன்றனர்.

    அப்போது அவரது ஆதார் எண்ணில் ஜெஸ்மி பெயர் இருப்பதாகக் கூறினர். மேலும் அந்த ஆதார் எண்ணை ஜெஸ்மியின் குடும்ப அட்டையில் சேர்த்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாடீஸ்வரி பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை.

    இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு நாடீஸ்வரி சிவகங்கை அரசு கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தார். ஆனால் அவரது ஆதார் எண்ணை வைத்து கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. வங்கிக் கணக்கும் தொடங்க முடியவில்லை. இதனால், அவர் சிரமமடைந்து வருகிறார்.

    இதுகுறித்து நாடீஸ்வரி பெற்றோர் கூறியதாவது: 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்த சமயத்தில் கொடுக்கப்பட்ட கார்டில் எனது மகளின் விவரங்கள் இருந்தன. அதன் பின்னர் எனது மகள் கைரேகை பதிவு செய்து உள்ளே சென்றால் ஜெஸ்மி என்பவரது விவரங்கள் வருகின்றன. இதுகுறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் உள்ள ஆதார் சேவா கேந்திரா அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். அவர்களும் சரிசெய்து தருவதாக கூறினர்.

    ஆனால் இதுவரை சரிசெய்யவில்லை. இதுகுறித்து பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணைய மண்டல அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதார் அட்டை தொடர்பான சேவைக்கு உதவும் எண் 1947-ல் பலமுறை தொடர்பு கொண்டும் பயனில்லை. தற்போது எங்களது மகளின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க முடியவில்லை.

    அரசின் கல்வி உதவித்தொகை பெற முடியவில்லை. 8 ஆண்டுகளாகப் போராடியும் எங்களால் ஆதார் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, ‘இதுவரை கேள்விப்படாத பிரச்சினையாக உள்ளது. பெங்களூரு இந்திய தனித்துவ அடையாள ஆணைய மண்டல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக…” – மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு

    August 21, 2025
    மாநிலம்

    பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதை தடுக்க வேண்டும்: இந்து முன்னணி

    August 21, 2025
    மாநிலம்

    ரிதன்யா தற்கொலை வழக்கு: கணவர், மாமனார், மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன்

    August 21, 2025
    மாநிலம்

    “தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெ., இபிஎஸ் படம் வருமா?” – சீமான் கேள்வி

    August 21, 2025
    மாநிலம்

    “பாஜக முதல்வர்களுக்கும் ஆபத்தான மசோதா இது…” – பெ.சண்முகம் எச்சரிக்கை

    August 21, 2025
    மாநிலம்

    “தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவீர்” – அன்புமணி

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக…” – மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு
    • டயாலிசிஸ் பக்க விளைவுகள்: சிக்கல்கள் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் பற்றி நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஒப்புக்கொண்டது ஏன்? – சுதர்சன் ரெட்டி விளக்கம்
    • பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதை தடுக்க வேண்டும்: இந்து முன்னணி
    • உங்கள் உடல்நலம் மற்றும் உடலை ரகசியமாக மோசமாக்கும் 4 தூக்க நிலைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.