Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி
    மாநிலம்

    ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வரும் பெற்றோருக்கு இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன் – பாமா. இத்தம்பதியின் மகன் கிஷோர் (23). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். அங்கு கிஷோர் 3-வது ஆண்டு படித்தபோது, தன்னுடன் அறை எடுத்து தங்கியிருந்த மாணவர்கள் சிலருடன் சேர்ந்து பகுதி நேரமாக கூரியர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.

    கடந்த 2023-ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை அவர் டெலிவரி செய்ததாக ரஷ்ய போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கிஷோருடன் மற்றொரு இந்திய மாணவர் நித்திஸ் மற்றும் ரஷ்ய மாணவர்கள் 3 பேரும் கைதாயினர். விசாரணைக்குப் பின் ரஷ்ய மாணவர்கள் 3 பேரை விடுவித்து விட்டனர். கிஷோரை மீட்க அவரது பெற்றோர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நித்திஸும் மீட்கப்படவில்லை.

    இந்தச் சூழலில் இரு மாதங்களுக்கு முன் ரஷ்ய போலீஸார் தன்னை ராணுவ தளத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பதாகவும், தன்னை உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்து கிஷோர் வீடியோ ஒன்றை அவரது பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து தனது மகனை மீட்க வேண்டும் என்று கடலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்காக ஆட்சியர் அலுவலகம் முன் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    இதற்கிடையே, துரை வைகோ எம்.பி இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சில தினங்களுக்கு நேரில் சந்தித்து, மாணவன் கிஷோர் மற்றும் இதுபோல் தவிக்கும் மற்றொரு இந்திய மாணவர் நித்திஸையும் ரஷ்யாவில் இருந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில், ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் கிஷோரின் வீடியோ மற்றும் புகைப்படம் வேறு ஒருவரின் செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    “பொய்யான ஒரு வழக்கில் எங்கள் மகன் மாட்டித் தவிக்கிறான். எங்கள் மகனை மீட்க முடியாமல் தவிக்கிறோம். அவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது” எனறு கிஷோரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் கிஷோர் ராணுவ உடையில் துப்பாக்கியு டன் இருக்கிறார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “பாஜக முதல்வர்களுக்கும் ஆபத்தான மசோதா இது…” – பெ.சண்முகம் எச்சரிக்கை

    August 21, 2025
    மாநிலம்

    “தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவீர்” – அன்புமணி

    August 21, 2025
    மாநிலம்

    2 பேருக்கு ஒரே ஆதார் எண் வழங்கியதால் 8 ஆண்டாக போராடும் மாணவி!

    August 21, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை ஐ.நா. அமைப்பு நிறுத்தி வைப்பு

    August 21, 2025
    மாநிலம்

    மதுரை | மாநாடு முன்கூட்டியே தொடங்கும்: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவிப்பு

    August 21, 2025
    மாநிலம்

    பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா ஒரு  திசை திருப்பும் செயல்: முதல்வர் ஸ்டாலின்

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பாஜக முதல்வர்களுக்கும் ஆபத்தான மசோதா இது…” – பெ.சண்முகம் எச்சரிக்கை
    • தந்தையைப் போல, மகனைப் போல: ஆரியும் ஷாருக்கானும் டாப்பர் சூனியம் சேவை செய்கிறார்கள்
    • பதவி பறிப்பு மசோதாவை கூட்டுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றம்
    • ‘சர்தார் 2’-க்குப் பின் இந்தி படம் இயக்குகிறார் மித்ரன்!
    • “தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றுவீர்” – அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.