Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்
    தேசியம்

    ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் 2-வது நாளாக நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், ‘ஆளுநர் ஒன்​றும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி’ என்று மத்​திய அரசு தரப்​பில் வாதிடப்பட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டது.

    இதையடுத்​து, குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதிபி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று 2-வது நாளாக நடந்​தது. அப்​போது நடந்த வாதம்:

    மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா: ஒப்​புதலுக்​காக அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர்கள் ஒப்​புதல் அளிக்​கலாம், மறுக்​கலாம், குடியரசுத் தலை​வருக்கு பரிந்​துரைக்​கலாம் அல்​லது திருப்பி அனுப்​பலாம் என 4 வாய்ப்​பு​கள் உள்​ளன. அந்த மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​க​வில்லை என்​றால், அவை காலா​வதி ஆகி​விட்​ட​தாகவே கருத வேண்​டும்.

    நீதிப​தி​கள்: அப்​படி​யென்​றால் மொத்த அதி​கார​மும் ஆளுநருக்​குத்​தான் உள்​ளது என்​பது​போல உள்​ளது. அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது பெரும்​பான்​மை​யான மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசு என்​ப​தை​யும் மறந்​து​விடக் கூடாது.

    மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்​தால், அதுகுறித்த தகவலை சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகளுக்கு தெரிவிக்​கலாம். அதே​நேரம் ஆளுநர் காரணமின்றி ஒப்​புதல் அளிக்​காமல் நீண்​ட​கால​மாக கிடப்​பில் போட்டு வைக்க முடி​யாது. இவ்​வாறு ஒப்​புதல் அளிக்​காமல் இருப்​பது தற்​காலிக​மான​தா, நிரந்​தர​மானதா என்​பதே இந்த விவாதத்​தின் முக்​கிய கருப்​பொருள்.

    சொலிசிட்​டர் ஜெனரல்: ஆளுநர் ஒன்​றும் நீட்​டிய இடங்​களில் கண்​களை மூடிக்​கொண்டு கையெழுத்து போடும் தபால்​காரர் இல்​லை. அவர் மத்​திய அரசின் பிர​தி​நி​தி. மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிர​தி​நி​தி​கள் மூல​மாக தேர்வு செய்​யப்​படும் குடியரசுத் தலை​வர் மூல​மாகவே ஆளுநரும் நியமிக்​கப்​படு​கிறார். அப்​படி​யென்​றால் இது​வும் ஒரு​வகை​யில் ஜனநாயகத்​தின் வெளிப்​பாடே.

    அரசி​யல், பொதுப் பணி​யில் அனுபவம் பெற்​றவர்​களே ஆளுந​ராக நியமிக்​கப்​படு​கின்​றனர். ஒப்​புதலுக்கு அனுப்​பப்​படும் மசோதா ஒரு​வரது அடிப்​படை உரிமை​களை பறிக்​கும் வகை​யில் இருந்​தால் அதற்கு ஒப்​புதல் அளிக்​காமல் இருக்​கும் சுய​விருப்​புரிமை அதி​காரத்தை ஆளுநர் அபூர்​வ​மாக பயன்​படுத்த முடி​யும்.

    நீதிப​தி​கள்: மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுப்பு தெரி​விப்​ப​தற்கு பதிலாக, அதில் திருத்​தங்​களை மேற்​கொள்ள பரிந்துரைக்கலாம். ஒரு​வேளை ஒப்​புதல் அளிக்​காமல் போனால் மாநில அரசு அவரை அணுகி அந்த மசோ​தாவை திருப்பி அனுப்பி வைக்க கோரலாம்.

    ஒரு மசோதா முதல்​முறை​யாக ஒப்​புதலுக்கு வந்​தால், அதை ஆளுநர் மறுக்​கவோ, திருப்பி அனுப்​பவோ முடி​யும். ஆனால், மறுநிறைவேற்​றம் செய்து அனுப்பி வைக்​கப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் போட முடி​யாது. ஆளுநர், பேர​வைக்​கான அதி​காரம் இரண்​டும் பலனற்​றுப் போகும் வகை​யில் செயல்​படக் கூடாது.

    தலைமை நீதிபதி கவாய்: அரசி​யல் சாசன சட்​டத்​துக்​கான விளக்​கம் எப்​போதும் ஒரே நிலைப்​பாட்டை கொண்​டிருக்க முடி​யாது. குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர்​கள், பேர​வைத் தலை​வர்​கள் ஆகியோரின் செயல்​பாடு​களை பொருத்து மாறும்.

    ஆளுநர்​கள் ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான கால நிர்​ண​யம் கடந்த காலங்​களில் இல்​லை​தான். அதனால் என்ன பயன் கிடைத்​தது. அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போலத்​தான். இவ்​வாறு கூறிய நீதிப​தி, வி​சா​ரணை​யை இன்​றைக்​கு (ஆக.21) தள்​ளி வைத்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி

    August 21, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி நாளை பிஹார், மே.வங்கம் பயணம்: ரூ.18,000 கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

    August 21, 2025
    தேசியம்

    2024-25-ல் அதிக ரத்தம் சேகரிப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    August 21, 2025
    தேசியம்

    கைதாவதற்கு முன் ராஜினாமா செய்தேன்: மக்களவையில் அமித் ஷா ஆவேசம்

    August 21, 2025
    தேசியம்

    மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் தர்கா சேதம்: போலீஸார் தீவிர விசாரணை

    August 21, 2025
    தேசியம்

    திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம்

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இணையத்தில் எழுந்த கிண்டல்கள்: நாக வம்சி பதிலடி
    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடையில்லை: உயர் நீதிமன்றம்
    • விரைவான முடி மீண்டும் வளர்ப்பதற்கு வழுக்கை புள்ளிகளை எண்ணெயுடன் மசாஜ் செய்வது எப்படி
    • UIDAI உடன் இணைந்து இந்தியாவில் தடையற்ற வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ஆதார் பயன்படுத்த எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பரசுராம்புரி என பெயர் மாறும் ஜலாலாபாத் தாலுகா: உ.பி. அரசுக்கு மத்திய உள்துறை அனுமதி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.