Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திருபுவனம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
    மாநிலம்

    திருபுவனம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திருபுவனம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல் / தென்காசி: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்திவந்த இம்தாலுல்லா என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல, தென்காசியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் 2019 பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததே கொலைக்கான காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலி என்பவரை கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

    இந்நிலையில், திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உள்ளது. இங்கு நேற்று காலை 6.15 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெறுவதை அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஷேக் அப்துல்லா வீட்டின் முன் திரண்டு, என்ஐஏ சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல, வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற சோதனை 2 மணி நேரம் நடந்தது. ஒட்டன்சத்திரம் சும்சுதீன் காலனியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முகமது யாசின் வீட்டிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வரும் இம்தாதுல்லா (40) என்பவரின் வீடு, கடை மற்றும் பூம்பாறையில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஏறத்தாழ 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு இம்தாதுல்லாவை கைது செய்து, அழைத்து சென்றனர்.

    பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடையவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

    கடையநல்லூர் பேட்டை புது மனை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது வீட்டில் நேற்று காலை 6.30 மணிக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையொட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை 9.40 மணி வரை நடைபெற்றது.

    தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது அலி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். முகமது அலியின் வீட்டிலிருந்த அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி

    August 21, 2025
    மாநிலம்

    பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா: மக்களாட்சி அடித்தளத்தை களங்கப்படுத்தும் செயல் – முதல்வர் ஸ்டாலின்

    August 21, 2025
    மாநிலம்

    100 தொகுதிகளில் 34 நாட்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து மக்களை சந்தித்த பழனிசாமி 

    August 21, 2025
    மாநிலம்

    கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம்

    August 21, 2025
    மாநிலம்

    ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

    August 21, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் 50-வது திருமண நாள்: மனைவி துர்காவுடன் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து
    • ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ்
    • அல்லு அர்ஜுன் – அட்லி படத்துக்கு 100 நாள் கால்ஷீட் கொடுத்த தீபிகா!
    • முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி
    • நடைபயிற்சி: படிகள் Vs நிமிடங்கள், பயிற்சி இலக்குகளுக்கு எது சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.