Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சிறுநீரக திருட்டை தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: திமுகவுக்கு அன்புமணி கண்டனம்
    மாநிலம்

    சிறுநீரக திருட்டை தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: திமுகவுக்கு அன்புமணி கண்டனம்

    adminBy adminAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறுநீரக திருட்டை தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: திமுகவுக்கு அன்புமணி கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன் பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: “நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன்பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக் குறிவைத்து கல்லீரல் திருட்டும் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி மனித உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்து சட்டவிரோத செயல்களையும் திமுக அரசு ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரத்தைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கந்து வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரை அணுகிய இடைத்தரகர்கள் அவரது சிறுநீரகத்திற்கு ரூ.8 லட்சம் விலை பேசியுள்ளனர். அவரை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்த போது அவரது சிறுநீரகத்த்தை மாற்ற முடியாது என்று தெரியவந்துள்ளது. அதனால், அவருக்கு மருத்துவ ஆய்வு செய்ய ஆன செலவுகளை தரும்படி அந்த பெண்ணை மிரட்டிய தரகர்கள், ஒரு கட்டத்தில் அவரது கல்லீரலை எடுத்துக் கொண்டு அதற்காக ரூ.4.5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் ரத்த உறவு இல்லாதவர்களுக்கு உடல் உறுப்புகளைக் கொடையாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து விதிகளையும் மீறி நாமக்கல் மாவட்டத்தில் வறுமையில் வாடும் மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிறுநீரகங்களை திருடியுள்ளனர். சிறுநீரகத்தை எடுக்க முடியாத நிலையில் கல்லீரலைத் திருடியுள்ளனர். அப்படியானால், தமிழ்நாட்டில் உடல் உறுப்பு வணிகம் எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை கொள்ளையடித்த கும்பலைச் சார்ந்த முக்கியக் குற்றவாளிகள் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஏமாற்றி அழைத்து வரப்பட்ட ஏழை மக்களிடமிருந்து சிறுநீரகங்களை பறித்து மற்றவர்களுக்கு பொருத்திய திருச்சி மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மருத்துவமனை திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு சொந்தமானது என்பதால் தான் சலுகை காட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் ஒரு படி மேலே போய்,”தற்போது நடந்திருப்பது சிறுநீரக திருட்டு அல்ல; சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு. இதை புரிந்துகொள்ள வேண்டும். இது திருட்டு அல்ல; முறைகேடு” என்று கூறியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் போதை மருந்துக் கடத்தல் முதல் உடல் உறுப்புத் திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ஏழை மக்களின் உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை ஆகும். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று அன்புமணி கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது’ – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 19, 2025
    மாநிலம்

    ஜெகதீப் தன்கர் எங்கே? – சிபிஆருக்கு ஆதரவு கோரும் பாஜகவுக்கு சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

    August 19, 2025
    மாநிலம்

    மதுரை தவெக மாநாட்டு திடல் தயார் – பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார், 500 பெண் பவுன்சர்கள்!

    August 19, 2025
    மாநிலம்

    வேலூர் அதிமுக பிரச்சார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: இபிஎஸ் எச்சரிக்கை

    August 19, 2025
    மாநிலம்

    நாமக்கல்: கல்லீரல் முறைகேட்டை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு!

    August 19, 2025
    மாநிலம்

    அதிமுக விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது’ – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    • இரத்த சோகை, தைராய்டு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 121 கிலோ தங்கம் வழங்க முன்வந்துள்ள பக்தர்!
    • ஜெகதீப் தன்கர் எங்கே? – சிபிஆருக்கு ஆதரவு கோரும் பாஜகவுக்கு சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி
    • நாள்பட்ட வலிக்கான உடற்பயிற்சி: உடல் செயல்பாடு எவ்வாறு நன்றாக உணர உதவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.