Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய பாஜக முயற்சி
    தேசியம்

    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய பாஜக முயற்சி

    adminBy adminAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஒருமனதாக சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய பாஜக முயற்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் சி.பி.ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சி துவங்கி உள்ளது. இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவு கேட்டுள்​ளார். தொடர்ந்து அவர் இண்​டியா கூட்​ட​ணி​யிலுள்ள கட்சி தலை​வர்​களை​யும் சந்​தித்து ஆதரவு கேட்க உள்​ளார் எனத் தெரி​கிறது.

    ஆளும் கட்​சி​யின் வேட்​பாளர் என்​ப​தால் அதன் தேர்​தலில் சிபிஆரின் வெற்றி உறுதி எனக் கருதப்​படு​கிறது. அதேசம​யம், சிபிஆருக்கு எதி​ராக ஒரு உறு​தி​யான வேட்​பாளரை நிறுத்த எதிர்க்​கட்​சிகள் கூட்​ட​ணி​யான இண்​டியா சார்​பிலும் வியூ​கம் அமைக்கப்​படு​கிறது.

    செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெற​விருக்​கும் தேர்​தலுக்​காக நாடாளு​மன்ற சார்​பில் தரவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதன்​படி, குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் மொத்​தம் 782 எம்​பிக்​கள் வாக்​களிக்​கத் தகு​தி​யுடைய​வர்​கள். அவர்​களில் 542 பேர் மக்களவை​யிலும், 240 மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர்.

    தேர்​தலில் வெற்றி பெற 392 எம்​பிக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. மக்​களவை​யில் மத்​திய அரசுக்கு ஆதர​வாக 293 எம்பிக்களும், 134 எம்​பிக்​கள் மாநிலங்​களவை​யிலும் உள்​ளனர். இவை மொத்​தம் சேர்த்து மத்​திய அரசிற்கு 427 எம்​பிக்​களின் ஆதரவு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 249 பேர் மக்​களவை​யிலும், 106 பேர் மாநிலங்​களவை​யிலும் என மொத்​தம் 355 பேர் உள்​ளனர்.

    எனினும், எதிர்க்​கட்சி எம்​பிக்​களில் 133 பேரின் நிலை இன்​னும் உறு​தி​யாக முடி​வெடுக்க முடி​யாத நிலை​யில் இருப்​ப​தாகக் கருதப்படு​கிறது. இந்​த 133 முடிவு செய்​யப்​ப​டாத எம்​.பி.க்​கள் வாக்​கு​களின் ஆதர​வைப் பெறு​வதற்​கான முயற்​சிகள் தீவிரமடைந்துள்​ளன.

    குடியரசுத் துணைத் தலை​வ​ராக சிபிஆர் தேர்​வா​னால், நாட்​டின் ஆளுநர்​கள் பட்​டியலில் தமிழர்​கள் இல்லை என்ற நிலை வரும். அப்போது புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். மேலும், சிபிஆர் தேர்வு, தமிழகத்தில் காங்கிரஸ்-திமுகவுக்கு சட்டப்பேரவை தேர்தலில் நேரடியான சவாலாகும் சூழல் தெரிகிறது.ஏனெனில் அவர் தமிழ் நாட்டின் கோயம்புத்தூரில் அதுவும் ​கொங்கு வேளாளர் சமூகத்​தைச் சேர்ந்​தவ​ராக சிபிஆர் உள்​ளார்.

    இதி​லும், கோயம்​புத்​தூர் மக்​களவை தொகு​தி​யின் எம்​பி​யாக 2 முறை இருந்​துள்​ளார். இவருக்கு அளிக்​கப்​படும் புதிய பதவி​யின் தாக்​கம் தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் எதிரொலிக்​கும் என்ற எதிர்​பார்ப்​பும் பாஜக தலை​மை​யிடம் எழுந்​துள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்!” – தேஜஸ்வி யாதவ் சூளுரையால் பரபரப்பு

    August 19, 2025
    தேசியம்

    இலவச உணவுக்கு தாமதப்​படுத்​தி​ய​தால் 80 மாணவர்​களின் உயிரை காத்த ஆசிரியர்

    August 19, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு

    August 19, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கவும்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    August 19, 2025
    தேசியம்

    Bihar SIR: நாடாளுமன்ற வளாகத்தில் கார்கே தலைமையில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

    August 19, 2025
    தேசியம்

    உத்தராகண்ட்டில் உயிரிழந்ததாக கருதிய 3 பேர் உயிருடன் வீடு திரும்பினர்

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்!” – தேஜஸ்வி யாதவ் சூளுரையால் பரபரப்பு
    • வில்லிவாக்கத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு
    • ஒரு ரசிகருடன் தூங்குவது மாரடைப்பு ஏற்பட முடியுமா? இதய ஆரோக்கிய ஆபத்துக்களைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இலவச உணவுக்கு தாமதப்​படுத்​தி​ய​தால் 80 மாணவர்​களின் உயிரை காத்த ஆசிரியர்
    • சிறுநீரக திருட்டை தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: திமுகவுக்கு அன்புமணி கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.