Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
    தேசியம்

    டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லி அருகேயுள்ள குருகிராமில் பாடகர் எல்விஷ் யாதவ் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லி அரு​கே​யுள்ள குரு​கி​ராமில் பாடகர் எல்​விஷ் யாதவ் வீட்​டின் மீது மர்ம நபர்​கள் நேற்று துப்​பாக்​கிச் சூடு நடத்தினர். டெல்லி அருகே உள்ள குரு​கி​ராமை சேர்ந்​தவர் எல்​விஷ் யாதவ் (27). பாடகர், யூ டியூபர், தொழில​திபர் என பன்​முகத்தன்மை கொண்ட அவர் கடந்த 2023-ம் ஆண்டு இந்தி பிக்​பாஸ் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று முதல் பரிசை வென்​றார்.

    அவரது யூ டியூப் சேனலில் 1.5 கோடிக்​கும் மேற்​பட்ட சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். இது​வரை 13 இசை ஆல்​பங்​களை அவர் வெளியிட்டு உள்​ளார். பல்​வேறு தொலைக்​காட்சி நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று உள்​ளார்.

    யூ டியூப், இசை ஆல்​பங்​கள் மூலம் மிக குறுகிய காலத்​தில் அவர் ரூ.50 கோடி வரு​வாய் ஈட்டி உள்​ளார். சிஸ்​டம் என்ற பெயரில் ஆடைகள் விற்​பனை நிறு​வனத்​தை​யும், ஆன்​லைன் விளை​யாட்டு தொடர்​பான யூ டியூப் சேனலை​யும் அவர் வெற்​றிகர​மாக நடத்தி வரு​கிறார்.

    டெல்லி குரு​கி​ராமின் ரயில் விகார் பகு​தி​யில் எல்​விஷ் யாத​வின் வீடு உள்​ளது. நேற்று அதி​காலை 5.30 மணி அளவில் எல்​விஷ் யாத​வின் வீட்​டின் மீது இரு மர்ம நபர்​கள் சரமாரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் வீட்​டின் பால்​க​னி, சுவர், ஜன்​னல்கள், கதவு​களில் குண்​டு​கள் துளைத்​தன. அந்த நேரத்​தில் எல்​விஷ் யாதவ் வீட்​டில் இல்​லை.

    அங்கிருந்த அவரது தாயாருக்கும் பணிப் பெண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து குரு​கி​ராம் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று விசா​ரணை நடத்​தினர். வீட்​டில் இருந்து ஏராள​மான துப்​பாக்கி குண்​டு​கள் கைப்​பற்​றப்​பட்டு உள்​ளன. வீடு முழு​வதும் 12 இடங்​களில் துப்​பாக்கி குண்​டு​கள் பாய்ந்​ததற்​கான தடயங்​கள் உள்​ளன.

    இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: எல்​விஷ் யாத​வின் வீட்​டின் மீது மர்ம நபர்​கள் 30-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்கி குண்​டு​களை சுட்டு உள்​ளனர். அவற்றை கைப்​பற்றி எந்த வகை​யான குண்​டு​கள் என்று ஆய்வு செய்து வரு​கிறோம். சிசிடிவி கேம​ரா​வில் பதிவான காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறோம். இவ்​வாறு போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

    பாவ் கேங் பொறுப்​பேற்பு: எல்​விஷ் யாதவ் வீட்​டின் மீது நடத்​தப்​பட்ட துப்​பாக்​கிச்​சூடு தாக்​குதலுக்கு ஹிமான்ஷு பாவ் தலைமையிலான பாவ் கேங் என்ற ரவுடி கும்​பல் பொறுப்​பேற்று உள்​ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் டெல்லி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் கொலை, ஆள்​கடத்​தல், மிரட்டி பணம் பறிப்​பது உள்​ளிட்ட குற்​றச் செயல்​களில் பாவ் கேங் கும்​பல் ஈடு​பட்டு வரு​கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

    August 18, 2025
    தேசியம்

    வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

    August 18, 2025
    தேசியம்

    சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு

    August 18, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட் அரசுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை

    August 18, 2025
    தேசியம்

    ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளியான விவகாரம்: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்

    August 18, 2025
    தேசியம்

    மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எந்த நாட்டில் மிகவும் விஷ பாம்புகள் உள்ளன? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு
    • சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஜஸ்பிரீத் பும்ரா ஆர்வம்!
    • பயணிகளின் தேவைக்காக தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.